கமலுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது - ஆளுநர் ரோசய்யா வழங்குகிறார்
சென்னை: நடிகர் கமலஹாசனுக்கு இன்று வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது.
தமிழ் சேம்பர் ஆப் காமர்ஸ் மற்றும் சோழா நாச்சியார் பவுண்டேசன் இணைந்து உருவாக்கியுள்ள இந்த விருதினை, தமிழக ஆளுநர் ரோசைய்யா வழங்குகிறார்.

இதற்கான விழா இன்று மாலை 7.30 மணிக்கு மைலாப்பூரில் உள்ள ஏ.வி.எம். ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.
இந்த விழாவில் பழம்பெரும் இயக்குனர்கள் எஸ்.பி. முத்துராம் மற்றும் ஆர்.சி. சக்தி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார்கள்.
தமிழக கவர்னர் ரோசய்யா, கமல் ஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கி பாராட்டிப் பேசுகிறார். இயக்குனர் எஸ்பி முத்துராமன் கமலை வைத்து 10 படங்கள் எடுத்துள்ளார். ஆர்.சி. சக்தி, உணர்ச்சிகள், மனிதனில் இத்தனை நிறங்களா போன்ற படங்களில் கமலை இயக்கியுள்ளார்.
Comments


Click it and Unblock the Notifications