twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பிலிம்ஃபேர் விருது விழாவில் முத்தமிட்டு ராசியான துருவங்கள் மகேஷ் பாபு, சமந்தா

    By Siva
    |

    சென்னை: நே ஒக்கடினே தெலுங்கு பட போஸ்டரை பார்த்து கமெண்ட் அடித்து மகேஷ் பாபுவின் ரசிகர்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்ட சமந்தா பிலிம்ஃபேர் விருது விழாவில் மகேஷுடன் சமரசம் ஆகியுள்ளார்.

    தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ள சமந்தா மகேஷ் பாபுவுடன் சேர்ந்து 2 படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் மகேஷின் நடிப்பில் வெளியான நே ஒக்கடினே படத்தின் போஸ்டரை பார்த்த சமந்தா வாயை வைத்துக் கொண்டு சும்மா இல்லாமல் ஒரு கமெண்ட் அடித்து சர்ச்சையில் சிக்கினார்.

    இது என்ன ஹீரோயின் போஸ்டரில் மகேஷ் பாபுவின் பின்னால் நாய் போன்று நான்கு கால்களில் செல்கிறார் என்று சமந்தா தெரிவித்தார்.

    ரசிகர்கள்

    ரசிகர்கள்

    சமந்தாவின் கருத்தை கேட்ட மகேஷ் பாபுவின் ரசிகர்கள் அவரை ட்விட்டரில் வறுத்தெடுத்துவிட்டனர்.

    அஞ்சான்

    அஞ்சான்

    அஞ்சான் பட போஸ்டரில் சூர்யா சமந்தாவின் காலை பிடித்திருப்பதை பார்த்த மகேஷ் பாபு ரசிகர்கள் இது மட்டும் என்னவாம் என்று கேட்டனர்.

    பேச்சே இல்லை

    பேச்சே இல்லை

    இந்த போஸ்டர் பிரச்சனையால் மகேஷ் பாபுவும், சமந்தாவும் முகம் கொடுத்து பேசிக் கொள்வது இல்லை என்று கூறப்பட்டது.

    பிலிம்ஃபேர் விருது

    பிலிம்ஃபேர் விருது

    சென்னையில் நடந்த பிலிம்ஃபேர் விருது விழாவுக்கு மகேஷ் பாபு வந்திருந்தார், சமந்தாவும் வந்திருந்தார்.

    முத்தம்

    முத்தம்

    மகேஷ் பாபுவை பார்த்த சமந்தா அவர் இருக்கைக்கு அருகில் சென்று பேசினார். இருவரும் கன்னத்தில் முத்தமிட்டு ராசியாகிவிட்டனர்.

    பக்கத்தில்

    பக்கத்தில்

    விழாவில் சிறிது நேரம் மகேஷ் பாபு அருகில் சமந்தா அமர்ந்திருந்தார். இதன் மூலம் நாங்கள் ராசியாகிவிட்டோம் என்று ரசிகர்களுக்கு சொல்கிறார் போல சமந்தா.

    English summary
    Mahesh Babu and Samantha kissed and made up at the filmfare awards after the 1: Nenokkadine poster issue.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X