Don't Miss!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- News "மகளிர் உரிமை தொகை வரல.." அமைச்சரை பேச விடாமல் நிறுத்திய பெண்.. மேடையில் அடுத்து நடந்த பரபர சம்பவம்
- Automobiles அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- Sports ரோகித்.. ரோகித் என கத்திய ரசிகர்கள்.. ஓங்கி ஒரு அடி விட்ட ஹர்திக் பாண்டியா - வீடியோ
- Technology குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
நிகில் முருகனுக்கு சிறந்த ஊடகவியலாளர் விருது!
ரஜினி, கமல் உள்பட தமிழ் சினிமாவின் அனைத்து முன்னணி நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்களுக்கும் பிஆர்ஓவாகப் பணியாற்றி வருபவர் நிகில்.
சென்னை நீலாங்கரையில் உள்ள மீடியா ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் கல்லூரி தனது இரண்டாம் ஆண்டு விழாவில், இந்த ஆண்டுக்கான சிறந்த ஊடகவியலாளர் விருதினை நிகிலுக்கு வழங்கியது. இயக்குநர் ஜெயம் ராஜா இந்த விருதினை நிகிலிடம் வழங்கினார்.
முன்னதாக விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற இயக்குநர் ஜெயம் ராஜா, நிகிலைப் பாராட்டிப் பேசினார்.
விருது பெற்ற நிகில் கூறுகையில், "என் வேலை என்னவோ அதைச் சரியாக செய்வதாக நம்புகிறேன். இந்த விருது என்னை மேலும் உற்சாகப்படுத்தியுள்ளது. சந்தோஷமா இருக்கு. இந்த சந்தோஷத்துடன் எனக்கு ஒரு புதிய பயமும் வந்திருக்கிறது. இருக்கிற பெயரை காப்பாற்றிக் கொள்ள வேண்டுமே என்பதுதான் அது.
இந்த பெருமை எனக்கு கிடைத்ததில் என் உதவியாளர்களுக்கும் முக்கியப் பங்கிருக்கிறது. ஒருவரை தேரை நிலைக்கு கொண்டுவர முடியாது. உடனிருந்து இழுத்துக் கொண்டுவர மேலும் ஆட்கள் வேண்டுமல்லவா...
நான் இந்தத் துறையைத் தேர்ந்தெடுத்த போது, இந்த மாதிரி விருதுகள் வரும் என்றோ, முதலிடத்தைப் பிடிக்க வேண்டும் என்றே நினைக்கவில்லை.
'இதைச் செய்தால் இந்த பலன் கிடைக்கும் என்று நினைத்துக் கொண்டே வேலை செய்தால் நம்மால் எதையும் சரியாக செய்ய முடியாது. அனைத்தையும் சரியாக செய்து கொண்டே இருப்போம், மரியாதையும் பலனும் தானாகக் கிடைக்கும்' என்பார் இயக்குநர் ஷங்கர். அதை மனதில் கொண்டே நான் பணியாற்றுகிறேன். விருதை நினைத்துப் பணியாற்ற ஆரம்பித்தால், இந்த மாசம் எந்த விருது, அடுத்த மாசம் எது என்று யோசிக்க ஆரம்பித்துவிடுவோம்," என்றார்.