twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கவிஞர் விக்கிரமாதித்யனுக்கு சாரல் விருது

    By Shankar
    |

    ராபர்ட் - ஆரோக்கியம் அறக்கட்டளை வழங்கும் 2014ம் ஆண்டுக்கான 'சாரல் விருது - 2014' கவிஞர் விக்கிரமாதித்யனுக்கு வழங்கப்பட்டது.

    சாரல் விருது என்பது ராபர்ட் ஆரோக்கியம் அறக்கட்டளையின் சார்பில் ஆண்டுதோறும் சிறந்த இலக்கியவாதிகளுக்கு வழங்கப்படும் விருதாகும்.

    இந்த விருதுக்கு ரூபாய் ஐம்பதாயிரம் பரிசுத் தொகையாகவும், நாவல், சிறுகதை, கட்டுரை, கவிதை எனும் இலக்கிய வகைகளைத் தாங்கி நிற்கும் தமிழன்னையை உருவகப்படுத்தும் இலக்கியா எனும் அழகிய வெண்கலச் சிற்பமும் பரிசாக வழங்கப்படும்.

    இந்த அறக்கட்டளை சார்பில் திரைப்பட இயக்குநர்களான ஜேடி - ஜெர்ரி ஆகியோர் இவ்விருதுகளை வழங்கிச் சிறப்பித்து வருகின்றனர். கடந்த 6 ஆண்டுகளாக தொடர்ந்து வழங்கப்பட்டு வரும் சாரல் விருதை சென்ற ஆண்டு எழத்தாளர் பிரபஞ்சன் பெற்றார். இந்த ஆண்டு கவிஞர் விக்கிரமாதித்யனுக்கு வழங்கப்பட்டது.

    இந்த விருது விழா, சென்னை அண்ணா சாலையில் உள்ள புக் பாய்ண்ட்டில், 25.1.2014 சனிக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெற்றது.

    இந்த விருது விழாவில், 'நக்கீரன்' வாரமிருமுறை ஆசிரியர் நக்கீரன்கோபால், இயக்குநர்கள் பாலா, கரு.பழனியப்பன், ஜெடி -ஜெர்ரி, நடிகை ரோகிணி மற்றும் பலர் பங்கேற்றனர்.

    Poet Vikramathityan gets Saaral Award

    இதுவரை விருது பெற்றவர்கள்...

    திலீப்குமார்(2009), கவிஞர் ஞானக் கூத்தன் (2010), அசோகமித்திரன் (2011), வண்ணநிலவன், வண்ணதாசன்(2012), பிரபஞ்சன்(2013), கவிஞர் விக்கிரமாதித்யன் (2014)

    Read more about: award விருது
    English summary
    Poet Vikramathityan received Saaral 2014 award from Robert - Arokkiyam trust.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X