Don't Miss!
- News சனாதன ஒழிப்பு, மத வெறுப்பு, கோயில்கள் இடிப்பு வேண்டாமே! முதல்வர் ஸ்டாலினுக்கு இந்து முன்னணி கோரிக்கை
- Lifestyle திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு ஹப்பி நியூஸ்.. ஐஆர்சிடிசி அறிவித்த டூர் பேக்கேஜ்.. இதோ முழு விவரம்..!
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
சிறந்த இயக்குநருக்கான சைமா விருதை வென்றார் தமிழகத்தை சேர்ந்த பொன்குமரன்.. குவியும் பாராட்டுக்கள்..
சென்னை: 2019-ஆம் ஆண்டில் வெளியான யஜமானா என்ற கன்னட திரைப்படத்திற்காக தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகளின் (siima) சிறந்த இயக்குநர் (கன்னடம்) விருதை பொன்குமரன் வென்றுள்ளார்.
ஓடிடியில் ரிலீஸாகும் பிக்பாஸ் பிரபலங்களின படங்கள்... எந்தெந்த படங்கள்னு பாருங்க!
கன்னட திரைப்படம்
தமிழ்நாட்டை சேர்ந்த பொன்குமரன் தனது வெற்றியில் தனது குருநாதர்களான இயக்குநர்கள் கே பாக்யராஜ் மற்றும் கே எஸ் ரவிக்குமாருக்கு முக்கிய பங்குண்டு என்று தெரிவித்தார்.
பாரம்பரிய எண்ணெயைப் பயன்படுத்தும் கிராமம் ஒன்று பெரிய மாஃபியா மோசடியை எவ்வாறு சமாளிக்கிறது என்பதுதான் யஜமானா படத்தின் கதை. தர்ஷன், ரஷ்மிகா மந்தனா மற்றும் தன்யா ஹோப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படம் கர்நாடகா முழுவதும் 100-நாட்களுக்கு மேல் ஓடியது.
லிங்கா படத்தின் கதை
2011 ஆண்டு வெளியான 'விஷ்ணுவர்தனா' மூலம் இயக்குநராக அறிமுகமானார் பொன்குமரன். இந்த படத்திற்கு அவருக்கு siima சிறந்த அறிமுக இயக்குநர் விருது கிடைத்தது.பொன்குமரன், தமிழ் மற்றும் கன்னடத்தில் வெளியான சாருலதா படத்தையும் இயக்கியுள்ளார். கே எஸ் ரவிக்குமார் இயக்கி ரஜினிகாந்த் நடித்த லிங்கா படத்தின் கதையை பொன்குமரன் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு:
முன்னணி நடிகர்களை வைத்து பொன்குமரன் ஒரு புதிய படத்தை இயக்க உள்ளார். இந்த திரைப்படத்தை மிருகா உள்ளிட்ட படங்களை தயாரித்த ஜாகுவார் ஸ்டுடியோஸ் பேனரில் பி வினோத் ஜெயின் தயாரிக்கிறார். இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சரியான நேரத்தில் விருது:
நல்ல கலைஞர்களுக்கு விருதுகள் கிடைப்பது தான் அங்கீகாரம் மற்றும் வளர்ச்சி .சிறந்த படைப்பாளிகளுக்கு சரியான நேரத்தில் கிடைக்கும் பாராட்டுக்கள் பக்குவமான மன நிலையை மேம்படுத்தும் . பொன்குமரன் போன்ற திறமைசாலிகள் தமிழ் சினிமாவிற்கும் கன்னட சினிமாவிற்கும் கிடைத்த பெருமை .
குவியும் பாராட்டு
நிறைய விருதுகளை பொன்குமரன் வாங்க வேண்டும் என்றும் பல புதிய முயற்சிகள் எடுக்க வேண்டும் என்றும் பலரும் பாராட்டி வருகின்றனர் . கதை எழுதுவது, திரைக்கதை அமைப்பது இவ்விரெண்டுக்கும் உண்டான வித்யாசத்தை நன்கு புரிந்த பொன்குமரன் நிறைய சாதிக்க பல திட்டங்கள் தீட்டி வருகிறார் . விரைவில் புதிய பல படைப்புகள் வெளியே வரும் என்று பலரும் எதிர்பார்க்கின்றனர் .