Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
"முதல் இந்திய நடிகை..." - பிரியங்கா சோப்ராவுக்கு கிடைத்த கௌரவம்!
Recommended Video
மும்பை : பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா கடந்த ஆண்டு ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் சிறிது நேரம் தொகுப்பாளராக செயல்பட்டார். இந்திய நடிகைகளில் இந்த கௌரவம் முதன் முதலாக பிரியங்கா சோப்ராவுக்கு தான் வழங்கப்பட்டது.
தொடர்ந்து இந்த ஆண்டு ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்படும் படங்கள் பட்டியலை வெளியிடும் வாய்ப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. பொதுவாக ஹாலிவுட்டின் முன்னணி நடிகைகளுக்கே இந்த வாய்ப்பு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்கர் விருது வழங்கும் விழா வருகிற மார்ச் மாதம் 4-ம் தேதி நடக்கிறது. இந்த விருதுக்கு ஏராளமான படங்கள் விண்ணப்பித்துள்ளன. அவற்றிலிருந்து விருது போட்டிக்கு தகுதியான படங்களை ஆஸ்கர் விருது தேர்வு கமிட்டி தேர்வு செய்துள்ளது. பின்னர் இந்தப் படங்களில் இருந்து சிறந்த படங்கள், கலைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு விருதுகள் அறிவிக்கப்படும்.
இந்தப் பரிந்துரை படங்கள் அறிவிப்பு நிகழ்ச்சியில் பிரியங்கா சோப்ராவுடன் ஹாலிவுட் நடிகைகள் ரொசாரியோ டான்சன், ரிபெல் வில்சன், மச்செல் யோ, மிச்சல் ரோட்ரிக்ஸ் ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள். இதற்கான படப்பிடிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்தது.
ஹாலிவுட் சீரியல்களிலும் நடித்து வரும் பிரியங்கா சோப்ரா, இந்தியாவின் அதிகம் சம்பாதிக்கும் நடிகையாகவும் இருக்கிறார். ஹாலிவுட் நடிகையாக வளர்ந்ததன் மூலம் ஆஸ்கர் விருது பரிந்துரைப் பட்டியலை வெளியிடும் வாய்ப்பு கிடைத்திருப்பதாகக் கூறுகிறார்கள்.