Don't Miss!
- Finance திரும்பவுமா.. இன்போசிஸ் கொடுத்த ஷாக்கிங் செய்தி..! 20 வருடத்தில் முதல் முறையாக..!!
- News நாளை தீர்ப்பு நாள்.. அரசியல் அதிகாரத்தால் எதையும் மாற்றலாம்.. ஒரு விரல் புரட்சிக்கு ரெடியா?
- Technology புது கலர்.. அதே டிசைன்.. வாய்பிளக்க வைக்கும் விலை.. Nothing Ear மற்றும் Ear A அறிமுகம்.. ஏப்.22 முதல் விற்பனை!
- Automobiles காரை விட அவங்கதான் அழகா இருக்காங்க! விலை உயர்ந்த எலெக்ட்ரிக் வண்டியை வாங்கனது அவங்களா! சொக்கி போன ரசிகர்கள்!
- Lifestyle 1 கப் கோதுமை மாவும் 1/2 கப் ரவையும் வெச்சு.. ஈவ்னிங் இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க... சூப்பரா இருக்கும்..
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Sports ஒரு பந்துக்கு 12 ரன் அடிக்க பார்க்காதே.. எவ்வளவு முறை சொல்றது? இளம் வீரருக்கு சூர்யகுமார் அட்வைஸ்
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
வாகை சூட வா படத்துக்கு புதுவை அரசின் விருது!
புதுச்சேரி: சற்குணம் இயக்கத்தில் வெளியான வாகை சூட வா படத்துக்கு 2012-ம் ஆண்டிற்கான புதுவை அரசின் சிறந்த படத்துக்கான விருது வழங்கப்படுகிறது,
நாளை புதுவையில் நடக்கும் விழாவில் வெள்ளி நினைவுப் பரிசும் ரூ 1 லட்சம் ரொக்கமும் வழங்கப்படுகிறது.
மத்திய அரசின் தகவல் ஒலிபரப்பு அமைச்சகமும், புதுவை மாநில அரசும், அல்லயன்ஸ் பிரான்சேஸும் இணைந்து நடத்தும் இந்தியத் திரைப்பட விழா 2013 நாளை புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் நடக்கிறது.
முருகா திரையரங்கில் நடக்கும் இந்த நிகழ்ச்சிக்கு மாநில முதல்வர் என் ரங்கசாமி தலைமை ஏற்றுத் தொடங்கி வைக்கிறார்.
இந்த விழாவில் சிறந்த தமிழ் திரைப்படத்துக்கான விருது சற்குணம் இயக்கிய வாகை சூட வா படத்துக்குத்து தரப்படுகிறது.
ஒரு வெள்ளி நினைவுப் பரிசும், ரூ 1 லட்சம் ரொக்கப் பரிசும் இந்தப் படத்துக்கு தரப்படுகிறது. விழாவில் இயக்குநர் சற்குணம் கலந்து கொண்டு விருதினைப் பெறுகிறார்.
ஏற்கெனவே மத்திய அரசு, தமிழக அரசு மற்றும் பல்வேறு சர்வதேச திரைப்பட விழா விருதுகளை வாகை சூட வா வென்றுள்ளது.