Don't Miss!
- News பெங்களூர் ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பில் முதல் அரெஸ்ட்.. முஸம்மில் ஷரீப் என்பவரை கைது செய்த என்ஏஐ
- Sports RR vs DC : 36-3.. திடீரென உள்ளே புகுந்த அஸ்வின்.. அடுத்தடுத்து பறந்த சிக்சர்கள்.. தப்பிய ராஜஸ்தான்!
- Automobiles உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
சிங்கம் சிங்கிளாத் தான் வரும்.. ஐகான் விருதை பெற்ற சூப்பர்ஸ்டார்!
Recommended Video
சென்னை: சாதாரண கண்டக்டர் தமிழ் சினிமாவையும் தமிழ் ரசிகர்களையும் ஆள முடியும் என்ற அதிசயம் சொடக்கு போட்ட நொடியில் நடக்கவில்லை. சொட்டு சொட்டாக பல உழைப்பு வியர்வைகள் சிந்திய பின்னர் தான் அந்த சூப்பர்ஸ்டார் நாற்காலி ரஜினிகாந்திடம் காந்தமாக ஒட்டிக் கொண்டது.
இன்று கோவாவில் துவங்கியுள்ள 50வது சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் ஐகான் ஆஃப் இந்திய சினிமா எனும் மணிமகுடம் நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதுவரை தேசிய விருது பெறாத நடிகர் ரஜினிகாந்துக்கு, இந்த தேசம் வாழ்நாள் சாதனையாளர் விருதினை வழங்கி கெளரவித்துள்ளது.
பொன் விழா துவக்கம்
கோவாவில் சர்வதேச இந்திய திரைப்பட விழாவின் பொன் விழா இன்று கோலாகலமாக துவங்கியது. பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த் மற்றும் மத்திய அமைச்சர்கள் குத்து விளக்கேற்றி நிகழ்ச்சியை துவங்கி வைத்தனர்.
இந்தியளவில் டிரெண்டிங்
மத்திய அரசால் நடிகர் ரஜினிகாந்துக்கு இன்று வாழ்நாள் சாதனையாளர் விருதான ஐகான் ஆஃப் கோல்டன் ஜூபிளி விருது வழங்கப்பட உள்ள தகவலை அறிந்த ரஜினி ரசிகர்கள், இந்தியளவில் பிரைட் ஆஃப் இந்தியா ரஜினிகாந்த் என்ற ஹேஷ்டேகை டிரெண்ட் செய்து வருகின்றனர்.
|
ஐகான் விருது
கோவா சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் ரஜினிகாந்துக்கு ஐகான் ஆஃப் கோல்டன் ஜூபிளி விருது தற்போது வழங்கப்பட்டது. பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இணைந்து நடிகர் ரஜினிகாந்துக்கு இந்த விருதினை வழங்கினர். அனைவரும் எழுந்து நின்று கரகோஷம் எழுப்பி மரியாதை செலுத்தினர்.
|
வாழவைத்த தமிழ் மக்கள்
விருது பெற்ற நடிகர் ரஜினிகாந்த், கோவா சர்வதேச திரைப்பட விழா மேடையில், "என்னை வாழவைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கு நன்றி" என தமிழில் தனது வணக்கத்தை தெரிவித்த ரஜினிகாந்த், தொடர்ந்து ஆங்கிலத்தில் உரையாற்றினார்.