Don't Miss!
- News ஜாகுவார், லேண்ட் ரோவர் கார்களை.. உற்பத்தி செய்ய ராணிப்பேட்டையை தேர்வு செய்தது ஏன்? மொத்தமாக மாறுதே
- Finance ஓரே நாளில் 4.2 கோடி சம்பாதித்த நாராயணமூர்த்தி-யின் 5 மாத பேரன்.. எப்படி..?
- Technology இப்படியொரு புரொஜெக்டர் யாரும் பார்த்ததில்லை.. 32GB மெமரி.. 1080P ரெசல்யூஷன்.. எந்த மாடல்? என்ன விலை?
- Lifestyle தினமும் 10 பவுன் தங்கத்தை தூசியாக உமிழும் அதிசய எரிமலை... இந்த எரிமலையா இல்ல தங்கச்சுரங்கமானே தெரிலயே...!
- Automobiles ஹெல்மெட் போடாமல் பைக்கில் போன விஜய் சேதுபதி! ஓட்டு போட வந்த இடத்தில் மானமே போச்சு!
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
'கபாலி' ரஜினிக்கு தேசிய விருது கிடைக்கலியே...! ரசிகர்கள் ஏமாற்றம்
இன்று காலையிலிருந்தே சமூக வலைத் தளங்கள் பரபரத்துக் கொண்டிருந்தன... யாருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது என்று.
இந்திய அளவில் திரைப்படங்களுக்கான தேசிய விருது இன்று பிற்பகலுக்குப் பிறகு அறிவிக்கப்பட்டன.
இந்த ஆண்டு ரஜினிகாந்துக்கு சிறந்த நடிகர் விருது கிடைக்கும் என காை முதலே பலரும் கூறி வந்தனர். 40 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து வரும் ரஜினி, ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார். மாநில அரசின் விருதை பல முறை பெற்றுள்ளார்.
நூற்றாண்டின் தலை சிறந்த நடிகர் என்ற மத்திய அரசின் விருதினை 2014-ம் ஆண்டு பெற்றார். ஆனால் இன்னும் ஒரு முறை கூட சிறந்த நடிகருக்கான தேசிய விருதினைப் பெறவில்லை. அந்த ஏக்கம் தனக்கு இருப்பதாக ரஜினியே தெரிவித்திருந்தார்.
கடந்த ஆண்டு வெளியான கபாலி படத்தில் ரஜினியின் நடிப்பு வெகுவாகப் பேசப்பட்டது. ரஜினி தனது நடிப்பில் புதிய பரிமாணம் காட்டியிருந்தார்.
எனவே இந்தப் படத்துக்காக சிறந்த நடிகர் விருதினை ரஜினிக்கு வழங்கக் கூடும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் விருது அக்ஷய் குமாருக்கு தரப்பட்டுள்ளது.