Don't Miss!
- Sports எலியும், பூனையுமாக மாறிய அஸ்வின், நரைன்.. ஒரே ஓவரில் நிகழ்ந்த மோதல்.. மாற்றி மாற்றி பதிலடி
- News ராமநாதபுரத்தில் ஓபிஎஸ் வெல்வரா?அனுதாப அலையால் அதிமுகவுக்கு ஷாக்.. தந்தி டிவி சர்வேயில் ட்விஸ்ட்
- Lifestyle உங்க முகத்தில் சுருக்கங்கள் வந்து வயசான மாதிரி தெரியுறீங்களா? அப்ப தேங்காய் எண்ணெயை இப்படி யூஸ் பண்ணுங்க...!
- Finance ஒன்றுக்கும் மேற்பட்ட UAN நம்பர்களை ஆன்லைனில் இணைப்பது எப்படி? ரொம்ப ஈசி இதை பாலோ பண்ணுங்க..!
- Automobiles இ-பைக்கின் உற்பத்தி பணிகளை தொடங்கிய சென்னை நிறுவனம்! உலக நாடுகளே இத பாத்து மிரண்டு நிக்க போகுது!
- Technology BSNL சூப்பர் பிளான்.. 50GB டேட்டா.. 3600 SMS.. 36 நாள் வேலிடிட்டி.. தரமான ப்ரீபெய்ட் திட்டம்? என்ன விலை?
- Travel தமிழ்நாட்டுக்கு உள்ளேயும், பக்கத்துலயும் இவ்வளோ அழகான பெரிய நீர்வீழ்ச்சிகள் இருக்கு தெரியுமா?
- Education யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் ரிலீஸ்..லக்னோ இளைஞர் ஆதித்யா ஸ்ரீவஸ்தவா முதலிடம்
சரோஜா தேவி, சாரதாவுக்கு என்டிஆர் விருது; எஸ்பிபி, ஜெனிலியாவுக்கு நந்தி விருது!
ஆந்திர அரசு சார்பில் திரையுலகினருக்கு வழங்கப்படும் நந்தி விருதுகள் தமிழக அரசின் கலைமாமணி விருதுக்கு இணையானவை. 2009 மற்றும் 2010-ஆம் ஆண்டுக்கான ஆந்திர அரசின் நந்தி விருதுகள் வழங்கும் விழா ஐதராபாத்தில் நடந்தது.
விழாவில் ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி பங்கேற்று அரசு விருதுகளை வழங்கினார். அவர் பேசும்போது, ''அரசியலும் சினிமாவும் ஒன்றுதான். அரசியலில் யார் வெற்றி பெறுவார் என்பதை கணிக்க முடியாது. அதுபோல் சினிமாவிலும் எந்த படம் ஜெயிக்கும் என்பது தெரியாது'' என்றார்.
பழைய நடிகை சரோஜாதேவிக்கு என்.டி.ஆர். தேசிய விருதை கிரண்குமார் ரெட்டி வழங்கினார். நிகழ்ச்சியில் சரோஜாதேவி பேசும்போது, ''என்.டி.ஆருடன் இணைந்து படங்களில் நடித்துள்ளேன். அவர் பெயரால் விருது கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது'' என்றார். பழைய நடிகை சாரதாவுக்கும் என்.டி.ஆர். விருது வழங்கப்பட்டது.
நடிகைகள் ஜெயசுதா, நித்யாமேனன், ஜெனிலியா, பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம், தயாரிப்பாளர் ஏ.வி.எம். பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட பலர் நந்தி விருதுகள் பெற்றனர்.
பிஎன் ரெட்டி விருது இயக்குநர் ராகவேந்திர ராவ், நரசிங் ராவ் ஆகியோருக்கு வழங்கப்பட்டன.
நாகிரெட்டி மற்றும் சக்ரபாணி தேசிய திரைப்பட விருதுக்கு மீடியா ஜாம்பவான் ராமோஜி ராவுக்கு வழங்கப்பட்டது.
மகதீராவுக்கு பாப்புலர் பட விருதும், 'சொந்த ஊரு' படத்துக்கு கோல்டன் நந்தி விருதும், வேதம் (தமிழில் வந்த 'வானம்') படத்துக்கு சிறந்த படத்துக்கான கோல்டன் நந்தி விருதும் வழங்கப்பட்டன.