ரணகளத்திற்கு மத்தியிலும் நடிகர் சங்க கூட்டத்தில் மூத்த கலைஞர்களுக்கு விருது
சென்னை: நடிகர் சங்க பொதுக் குழு கூட்டத்தில் மூத்த கலைஞர்கள் விணு சக்ரவர்த்தி, சரோஜாதேவி, வாணிஸ்ரீ, வெண்ணிற ஆடை மூர்த்தி, சாரதா, எம்.என்.ராஜம் உள்ளிட்டோருக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
நடிகர் சங்க பொதுக் குழு கூட்டம் சென்னை தி. நகரில் உள்ள நடிகர் சங்க மைதானத்தில் நடந்து வருகிறது. அடையாள அட்டை இல்லாமல் வந்த சங்க உறுப்பினர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலில் முடிந்தது.

இதையடுத்து போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். மேலும் 20 பேரை கைது செய்தனர். இத்தனை ரகளைகளுக்கும் மத்தியில் பொதுக்குழு கூட்டம் தொடர்ந்து நடக்கிறது.

கூட்டத்தில் மூத்த கலைஞர்களான விணு சக்ரவர்த்தி, சரோஜாதேவி, வாணிஸ்ரீ, வெண்ணிற ஆடை மூர்த்தி, சாரதா, எம்.என்.ராஜம் உள்ளிட்டோருக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

உலக நாயகன் கமல் ஹாஸன் கூட்டத்திற்கு வராவிட்டாலும் ஸ்கைப் மூலம் பேசினார்.


Click it and Unblock the Notifications











