Don't Miss!
- News படத்துல 8 முயல்கள் இருக்கு! எங்க இருக்குனு கேட்காதீங்க! அத நீங்கள்தான் கண்டுபிடிக்கணும்!
- Sports என்னங்க இது.. இளம் வீரர்களை கதி கலங்க வைத்த தோனி STATS.. 42 வயதிலும் உலகின் சிறந்த ஃபினிஷர்
- Automobiles டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Finance தங்கம் விலை பொசுக்குனு குறைஞ்சிடுச்சு! கேட்கவே இனிமையா இருக்கு.. சென்னை, கோவை, மதுரையில் என்ன விலை?
- Lifestyle ஜோதிடத்தில் திசை என்றால் என்ன? உங்களுக்கு என்ன திசை நடக்கிறது? அதனால் கிடைக்கும் பலன்கள்..!
- Technology திடீர் பணம் தேவையா.. தனிநபர் கடன் வழங்கும் Google Pay.. எவ்வளவு கிடைக்கும்? எப்படி வாங்குவது?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
ஐஐஎப்ஏ உத்சவம்: பாகுபலி, தனி ஒருவனை வீழ்த்திய 'ரங்கிதரங்கா'
ஹைதராபாத்: நடந்து முடிந்த ஐஐஎப்ஏ விருது வழங்கும் விழாவில் அதிக விருதுகளைப் பெற்ற படம் என்ற பெருமையை மகேஷ்பாபுவின் ஸ்ரீமந்துடு மற்றும் கன்னடப்படமான ரங்கிதரங்கா ஆகியவை தட்டிச் சென்றுள்ளன.
ஐஐஎப்ஏ உத்சவம் என்ற பெயரில் இந்த வருடம் தென்னிந்தியத் திரைக் கலைஞர்களை அங்கீகரிக்கும் விதமாக சிறந்த நடிகர், நடிகை, இசையமைப்பாளர் என்று மொத்தம் 12 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன.
இந்த விழாவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தனி ஒருவன்,பாகுபலியை விட ரங்கிதரங்கா மற்றும் ஸ்ரீமந்துடு ஆகிய படங்கள் அதிக விருதுகளைப் பெற்று சாதனை படைத்தது.
ஐஐஎப்ஏ உத்சவம்
இந்தியாவில் பாலிவுட் கலைஞர்களை மட்டும் முன்னிலைப்படுத்தி சர்வதேச இந்திய திரைப்பட விருதுகள்(ஐஐஎப்ஏ) இதுநாள்வரை வழங்கப்பட்டு வந்தன. இந்த வருடம் முதல் தென்னிந்திய கலைஞர்களையும் ஊக்குவிக்கும் விதமாக இந்த விருதுகள் வழங்கும் விழா ஹைதராபாத்தில் நடந்து முடிந்திருக்கிறது.
ரங்கிதரங்கா
இந்த விழாவில் முதன்முறையாக சாண்டல்வுட்டில் இருந்து தேர்வான ரங்கிதரங்கா திரைப்படம் 6 விருதுகளைக் கைப்பற்றி சாதனை படைத்தது.
புதுமுகங்கள் நிரூப் பண்டாரி, அவந்திகா ஷெட்டி, ராதிகா சேத்தன் மற்றும் சீனியர் நடிகர் சாய்குமார் ஆகியோர் நடித்து வெளிவந்திருக்கும் கன்னட திரைப்படம் தான் இந்த ரங்கிதரங்கா.
6 விருதுகள்
படம் வெளியான புதிதில் பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய சாதனைகளை ரங்கிதரங்கா படைத்தது.தற்போது விருதுகளையும் கைப்பற்றி இருப்பது படக்குழுவினருக்கு மகிழ்ச்சியை அளித்திருக்கிறது. சிறந்த படம்(பிரகாஷ்), துணை நடிகர்(சை குமார்), வில்லன்(அரவிந்த் ராவ்), சிறந்த பாடலாசிரியர்(அனூப் பந்தாரி), சிறந்த இசையமைப்பாளர்(அனூப் பந்தாரி) மற்றும் சிறந்த இயக்குநர்(அனூப் பந்தாரி) ஆகிய 6 பிரிவுகளில் இப்படம் விருதுகளை வாரிக் குவித்தது.
ஸ்ரீமந்துடு
இதில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவின் சஸ்ரீமந்துடு திரைப்படம் சிறந்த நடிகர்(மகேஷ்பாபு), சிறந்த நடிகைசுருதிஹாசன்), சிறந்த துணை நடிகர்(ஜெகபதி பாபு), சிறந்த இசையமைப்பாளர்(தேவி ஸ்ரீ பிரசாத்), சிறந்த பாடலாசிரியர்(ராமஜோகையா சாஸ்திரி) மற்றும் சிறந்த பின்னணிப்பாடகர் (சாகர்) ஆகிய 6 விருதுகளை வென்றது.
பாகுபலிக்கு 5
சிறந்த படம், சிறந்த துணை நடிகர்(சத்யராஜ்) சிறந்த துணை நடிகை(ரம்யா கிருஷ்ணன்), சிறந்த வில்லன்(ராணா டகுபதி) மற்றும் சிறந்த பின்னணிப்பாடகி(சத்யா யாமினி) ஆகிய 5 பிரிவுகளில் இப்படம் விருதுகளைக் கைப்பற்றியது.
தனி ஒருவன்
2015 ன் மாபெரும் வெற்றிப்படமாக மாறிய தனி ஒருவன் திரைப்படம் சிறந்த நடிகர்(ஜெயம் ரவி), சிறந்த வில்லன்(அரவிந்த் சாமி) ஆகிய 2 பிரிவுகளில் விருதுகளை வென்றது.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாகுபலி, தனி ஒருவன் படங்களை விட கன்னடப்படமான ரங்கிதரங்கா விருதுகளை வாரிக் குவித்திருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது.