Don't Miss!
- News மோடி ஆட்சிக்கு வந்தால் அனைத்து ரயில் பயணிகளுக்கும் கன்பார்ம் டிக்கெட்- ரயில்வே அமைச்சர்
- Technology Aadhaar Update Cost: இனி ஆதார் அட்டையில் பெயர், முகவரி, போட்டோ மாற்ற கட்டணம்.. எவ்வளவு தெரியுமா?
- Sports LSG v CSK-சிஎஸ்கேக்கு பாதகமாக விழுந்த டாஸ்..பிளேயிங் லெவனில் அதிரடி மாற்றம்..பேட்டிங்கிலும் சர்பரைஸ்
- Automobiles வெறும் 1 ஸ்டார் ரேட்டிங்கை பெற்ற மஹிந்திரா கார்! இந்த காருக்கா இப்படி ஒரு நிலைமை?
- Finance நீங்க கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா.. ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க நச்சுனு 4 டிப்ஸ்!
- Lifestyle உங்களுக்கு இந்த அறிகுறிகள் அதிகம் தெரியுதா? அப்ப உடம்புல தண்ணீர் ரொம்ப கம்மியா இருக்கு-ன்னு அர்த்தம்... உஷார்.
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
மத்திய அரசுக்கு எதிர்ப்பு... தேசிய விருதை புறக்கணிக்க படக்குழு முடிவு
கொச்சி: குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து தேசிய விருது விழாவை புறக்கணிக்கப் போவதாக, சுடானி ஃபிரம் நைஜீரியா படக்குழு அறிவித்துள்ளது.
சவுபின் சாஹிர், நைஜீரிய நடிகர் சாமுவேல் அபியோலா ராபின்சன், அனீஷ் மேனன், அப்துல்லா, சாவித்திரி சசிதரன் உட்பட பலர் நடித்துள்ள மலையாள படம், சூடானி ஃபிரம் நைஜீரியா. ஸக்காரியா முகமது இயக்கி இருந்த இந்தப் படத்தை தயாரித்து ஒளிப்பதிவு செய்தவர் சைஜு காலித். இந்தப் படம் கேரளாவில் வரவேற்பை பெற்றது.
கேரள திரைப்பட விருது வழங்கும் விழாவில், 5 விருதுகளை இந்தப் படம் பெற்றது.
இந்தப் படத்துக்கு இரண்டு தேசிய விருதுகள் கிடைத்தன. சிறந்த பிராந்திய மொழி படத்துக்கான விருதும் சிறந்த குணசித்திர நடிகைக்கான சிறப்பு விருது இதில் சாவித்திரி சசிதரனுக்கும் கிடைத்தது. இந்நிலையில் தேசிய விருதை புறக்கணிக்கப் போவதாகப் படக்குழு அறிவித்துள்ளது.
குடியுரிமை சட்ட திருத்த மசோதா கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ஜனாதிபதி ஒப்புதலை பெற்றுள்ள இந்தச் சட்டத்துக்கு எதிராக அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் பெரும் போராட்டம் வெடித்துள்ளது. பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளன.
டைட்டிலை மாத்துங்க... உதயநிதி படத்துக்கு இப்படியொரு சிக்கலா?
இந்த சட்டத் திருத்தத்துக்கு, சுடானி ஃபிரம் நைஜீரியா படக்குழுவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதுபற்றி இதன் இயக்குனர் ஸக்காரியா கூறும்போது, குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்க்கும் விதமாக, தேசிய விருது விழாவை புறக்கணிக்க எங்கள் படக்குழு முடிவு செய்துள்ளது என்று தெரிவித்துள்ளார். இது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.