Don't Miss!
- Finance விப்ரோ: அசிம் பிரேம்ஜி, ரிஷாத் பிரேம்ஜி-க்கு மீண்டும் முக்கிய பதவி.. அடுத்த 5 வருடத்திற்கு அசைக்க முடியாது.
- News சென்னையை விடுங்க! சர்ரென முன்னேறிய தூத்துக்குடி, பெரம்பலூர், ராணிப்பேட்டை! உலகமே திரும்பி பார்க்குதே
- Automobiles லியோ படத்தில் விஜய்யுடன் நடிச்சாரு, இப்போது விலையுயர்ந்த டொயோட்டா காரில்!! கேரள நடிகையின் புது கார்!
- Lifestyle 1 கப் பச்சரிசி மாவு வெச்சு.. இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ஒரு வாரத்துக்கு ஸ்நாக்ஸ் பிரச்சனையே வராது..
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
- Sports "பிரேக் அப் பண்ணப் போறாங்க" அழகான பெண்ணை பார்த்து வாயை பிளந்த சுப்மன் கில்.. வெளியான வீடியோ
- Technology பொளந்து கட்டுது சேல்.. ரூ.20499 பட்ஜெட்ல 108MP கேமரா.. 3D டிஸ்பிளே.. 5800mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
'அப்பா' படத்திற்காக.. இயக்குநர் சமுத்திரக்கனிக்கு 'மணிவண்ணன்' விருது!
சென்னை: நாய் வால், திரைப்பட இயக்கம் சார்பில், இயக்குநர் மணிவண்ணன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மறைந்த திரைப்பட நடிகரும், இயக்குநருமான மணிவண்ணன் பெயரில், கோவையைச் சேர்ந்த நாய் வால் திரைப்பட இயக்கம் என்ற அமைப்பு கடந்த 2 ஆண்டுகளாக விருது வழங்கி வருகிறது. அதன்படி, 3ம் ஆண்டு விருது வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணிக்கு கோவை ஆர்.எஸ்.புரம் அன்ன பூர்ணா கலையரங்கில் நடைபெறுகிறது.
இதில், அப்பா திரைப்படத்துக்காக இயக்குநர் சமுத்திரகனிக்கும், பார்த்தீனியம் நாவலுக்காக கனடாவைச் சேர்ந்த எழுத்தாளர் தமிழ்நதிக்கும் விருது வழங்கப்பட உள்ளது.
இந்த விழாவில், எழுத்தாளர் பாமரன், மணிவண்ணனின் உதவியாளர் ரங்கநாதன், மருத்துவர் பெரியார் செல்வி, கவிஞர் பாபு, நடிகர் நமோ நாராயணன் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். விழா ஏற்பாடுகளை, நாய் வால் திரைப்பட இயக்கத்தின் செயலர் பெ.மயில்வண்ணன் தலைமையிலான குழுவினர் செய்து வருகின்றனர்.