Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
'அப்பா' படத்திற்காக.. இயக்குநர் சமுத்திரக்கனிக்கு 'மணிவண்ணன்' விருது!
சென்னை: நாய் வால், திரைப்பட இயக்கம் சார்பில், இயக்குநர் மணிவண்ணன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மறைந்த திரைப்பட நடிகரும், இயக்குநருமான மணிவண்ணன் பெயரில், கோவையைச் சேர்ந்த நாய் வால் திரைப்பட இயக்கம் என்ற அமைப்பு கடந்த 2 ஆண்டுகளாக விருது வழங்கி வருகிறது. அதன்படி, 3ம் ஆண்டு விருது வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணிக்கு கோவை ஆர்.எஸ்.புரம் அன்ன பூர்ணா கலையரங்கில் நடைபெறுகிறது.
இதில், அப்பா திரைப்படத்துக்காக இயக்குநர் சமுத்திரகனிக்கும், பார்த்தீனியம் நாவலுக்காக கனடாவைச் சேர்ந்த எழுத்தாளர் தமிழ்நதிக்கும் விருது வழங்கப்பட உள்ளது.
இந்த விழாவில், எழுத்தாளர் பாமரன், மணிவண்ணனின் உதவியாளர் ரங்கநாதன், மருத்துவர் பெரியார் செல்வி, கவிஞர் பாபு, நடிகர் நமோ நாராயணன் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். விழா ஏற்பாடுகளை, நாய் வால் திரைப்பட இயக்கத்தின் செயலர் பெ.மயில்வண்ணன் தலைமையிலான குழுவினர் செய்து வருகின்றனர்.