Don't Miss!
- News வெயிலில் சுருண்டு விழுந்து துடித்த மாற்றுத்திறனாளி.. உதவாமல் சென்ற மக்கள்! ஓடிப்போய் மீட்ட காவலர்
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Finance கிரெடிட் கார்டு வச்சு இருக்கீங்களா? அப்போ முதல்ல இதை படிங்க.. ரொம்ப முக்கியம்!
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
'அப்பா' படத்திற்காக.. இயக்குநர் சமுத்திரக்கனிக்கு 'மணிவண்ணன்' விருது!
சென்னை: நாய் வால், திரைப்பட இயக்கம் சார்பில், இயக்குநர் மணிவண்ணன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மறைந்த திரைப்பட நடிகரும், இயக்குநருமான மணிவண்ணன் பெயரில், கோவையைச் சேர்ந்த நாய் வால் திரைப்பட இயக்கம் என்ற அமைப்பு கடந்த 2 ஆண்டுகளாக விருது வழங்கி வருகிறது. அதன்படி, 3ம் ஆண்டு விருது வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணிக்கு கோவை ஆர்.எஸ்.புரம் அன்ன பூர்ணா கலையரங்கில் நடைபெறுகிறது.
இதில், அப்பா திரைப்படத்துக்காக இயக்குநர் சமுத்திரகனிக்கும், பார்த்தீனியம் நாவலுக்காக கனடாவைச் சேர்ந்த எழுத்தாளர் தமிழ்நதிக்கும் விருது வழங்கப்பட உள்ளது.
இந்த விழாவில், எழுத்தாளர் பாமரன், மணிவண்ணனின் உதவியாளர் ரங்கநாதன், மருத்துவர் பெரியார் செல்வி, கவிஞர் பாபு, நடிகர் நமோ நாராயணன் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். விழா ஏற்பாடுகளை, நாய் வால் திரைப்பட இயக்கத்தின் செயலர் பெ.மயில்வண்ணன் தலைமையிலான குழுவினர் செய்து வருகின்றனர்.