Don't Miss!
- News மாஸ் காட்டிய சென்னைவாசிகள்! 40 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு வாக்குப்பதிவு! 1980க்கு பிறகு இதுதான் அதிகம்
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
மகளிர் காங்கிரஸ் மாநாட்டில் நடிகைகள் கே.ஆர். விஜயா, மீனாவுக்கு விருது
கடலூர்: இந்திரா காந்தி நூற்றாண்டையொட்டி தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் கடலூரில் நடந்த மாநில மகளிர் மாநாட்டில் நடிகைகள் கே.ஆர். விஜயா, மீனா ஆகியோருக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
இந்திரா காந்தி நூற்றாண்டையொட்டி தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் கடலூரில் மாநில மகளிர் மாநாடு நடத்தப்பட்டது. மஞ்சக்குப்பம் மைதானத்தில் நடந்த மாநாட்டுக்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் யசோதா தலைமை வகித்தார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.எஸ்.அழகிரி, மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், வழக்கறிஞர் சந்திரசேகரன், தொழில் அதிபர் மணிரத்தினம், சாய்லட்சுமி, கரோலின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநாட்டு கொடியை தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் கே.வி. தங்கபாலு ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியில் நடிகைகள் கே.ஆர். விஜயா, மீனா ஆகியோருக்கு இந்திரா காந்தி விருதும், தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது.
விருது மற்றும் தங்கப் பதக்கங்களை புதுச்சேரி அமைச்சர் கந்தசாமி வழங்கினார். பிற்பகல் 3 மணிக்கு இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. இந்த மாநாட்டில் சின்னத்திரை நடிகைகளும் கவுரவிக்கப்பட்டனர்.