Don't Miss!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Lifestyle April Horoscope 2024: ஏப்ரல் மாதம் இந்த ராசிக்காரர்களுக்கு பண மழை பொழியப் போகுது...
- Technology ரூ.17,000 பட்ஜெட்ல பரபரப்பு! 70W சார்ஜிங், 6000mAh பேட்டரி, 24GB ரேம், 1TB மெமரி, 5G ஆதரவு.. ஏப்.4 முதல் SALE!
- News தேனி அருகே ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் அடுத்தடுத்து உயிரிழப்பு.. போலீசார் தீவிர விசாரணை
- Sports ரூ.8.4 கோடியை மறந்துவிடு.. உன்னோட வேலை அதுமட்டும் தான்.. தோனியின் வார்த்தை குறித்து சிஎஸ்கே சிங்கம்!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
66வது தேசிய திரைப்பட விருதுவிழா.. அசத்தலாய் துணை குடியரசுத் தலைவர் கையால் விருது பெற்ற பிரபலங்கள்!
டெல்லி: 66வது தேசிய திரைப்பட விருது விழாவில் சிறந்த நடிகைக்காக தேசிய விருதை நடிகை கீர்த்தி சுரேஷ் துணை குடியரசுத் தலைவர் கையால் விருது பெற்றார்.
66-வது தேசிய திரைப்பட விருதுகள் கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் விருது வழங்கும் விழா டெல்லியில் உள்ள விக்யான் பவனில் இன்று காலை நடைபெற்றது.
இந்த விழாவில் திரைத்துறையை சேர்ந்த பிரபலங்கள், நடிகர் நடிகைகள், விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.விருது வழங்கும் நிகழ்ச்சியில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பங்கேற்றர்.
துணைக்குடியரசுத் தலைவர்
தேசிய விருதுகளை வழக்கமாக குடியரசுத் தலைவர்தான் வழங்குவார். ஆனால், இந்த முறை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு பதிலாக துணைக் குடியரசுத் தலைவரான வெங்கய்ய நாயுடு விருதுகளை வழங்கினார்.
சிறந்த நடிகை
விருதுகளை பெற்றவர்களுக்கு இன்று மாலை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேநீர் விருந்து அளிக்கவுள்ளார். இன்று நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், சிறந்த நடிகைக்கான தேசிய விருதை கீர்த்தி சுரேஷ் பெற்றுக் கொண்டார்.
சிறந்த தமிழ் படம்
மகாநடி படத்தில் நடித்ததற்காக அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டது. சேலையில் செம ஹோம்ளியாக அசத்தும் அழகில் சென்று விருதை பெற்றார். தமிழில் சிறந்த படமாக பிரியா கிருஷ்ணசாமி இயக்கிய பாரம் படம் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது.
சிறந்த படம்
கடந்த ஆகஸ்ட் மாதம் 31 பிரிவுகளின் கீழ் விருதுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி சிறந்த திரைப்படமாக அறிவிக்கப்பட்ட குஜராத்தி மொழி படமான ‘ஹெல்லாரோ' படத்திற்கு தேசிய விருது வழங்கப்பட்டது.
இணைந்து பெற்றனர்
‘உரி: சர்ஜிக்கல் ஸ்டிரைக்‘ படத்தில் நடித்த விக்கி கெளசால், ‘அந்தாதூன்' படத்தில் நடித்த ஆயுஷ்மான் குரானா ஆகியோர் சிறந்த நடிகர்களுக்கான தேசிய விருதை இணைந்து பெற்றுக்கொண்டனர். ‘உரி: சர்ஜிக்கல் ஸ்டிரைக்‘ திரைப்படத்தின் இயக்குநர் ஆதித்யதர் சிறந்த இயக்குநருக்கான விருதை பெற்றார்.