Don't Miss!
- Automobiles தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
- News தமிழ்நாட்டில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு சம்பளம் எவ்வளவு.. இவ்வளவு சலுகைகளா? ஆச்சர்யமான தகவல்கள்
- Technology iPhone-க்கு நெத்தி அடி.. வயர்லெஸ் MagCharge உடன் வந்த முதல் ஆண்ட்ராய்டு போன்.. Samsung இல்லை OnePlus இல்லை..
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
விருது விழாவுக்கு ஏற்பாடு செய்யும் மாநில அரசு... விஷாலுக்கு நெருக்கடி?
சென்னை: தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட திரைப்பட விருதுகளை ஜனவரி மாதத்தில் விழா வைத்து வழங்க ஆட்சியாளர்கள் திட்டமிடுகிறார்களாம். இது விஷாலுக்கு நெருக்கடி ஏற்படுத்தும் என்கிறார்கள்.
கலைஞர் ஆட்சியில் இருந்தவரை அடிக்கடி விழா எடுத்து கலைஞரை மகிழ்விப்பார்கள் திரைத்துறையினர். ஜெயலலிதாவிடம் இந்த பாச்சா பலிக்கவில்லை. அவர் இருந்தவரை ஜால்ரா கும்பலை நெருங்கவே விடவில்லை. நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் கேட்டுப் பார்த்தும் முடியாது என்று மறுத்துவிட்டார். ஆனால் ஜெயலலிதா மறைந்த பிறகு ஏராளமான வருங்கால முதல்வர்கள் சினிமாவில் முளைத்திருக்கிறார்கள். தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம் என்று இரண்டு முக்கிய சங்கங்களிலும் தலைமை பொறுப்பில் இருக்கும் விஷால் ஒருபடி மேலே போய் ஆர்கே நகர் இடைதேர்தலில் போட்டியிட்டதோடு ஆளுங்கட்சியை விமர்சனமும் செய்தார்.
இதற்கெல்லாம் செக் வைக்கும் விதமாக தமிழ அரசு சினிமாத்துறையினருக்கு அறிவித்திருக்கும் விருதுகளை ஒரு விழா வைத்து வழங்கப்பட திட்டமிட்டுள்ளதாம். இந்த விழாவுக்கு ரஜினி, கமல், விஜய், அஜித் உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் கண்டிப்பாக கலந்துகொள்ள வேண்டி வரும். முதல்வரையும் அரசையும் பாராட்டியே ஆக வேண்டும்.
விஷால்தான் தலைமையேற்று நடத்த வேண்டி இருக்கும். இது அவருக்கு அரசு தரும் புது நெருக்கடி என்றே சொல்கிறார்கள்.