Don't Miss!
- News வரிசையில் நின்று வாக்களித்தார் எடப்பாடி பழனிசாமி.. ஓட்டு போட்ட பின்னர் வைத்த முக்கிய கோரிக்கை!
- Sports என்னை மிரட்டி ஆர்சிபிக்கு விளையாட வைத்தார் கோலி.. உலககோப்பை தோல்வி வலித்தது- கேஎல் ராகுல் பேச்சு
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
யாஷிகா ஆனந்த் நடித்த " பெஸ்டி" திரைப்படம் விருதுகளை குவித்து வருகிறது.
சென்னை:ஆர்.எஸ்.சினிமா என்ற பட நிறுவனம் ஓம் முருகா படப்புகழ் அசோக் குமார் மற்றும் யாஷிகா ஆனந்த் நடித்த " பெஸ்டி " திரைப்படத்தை தயாரித்துள்ளது.
இதில் மேலும் மாறன், அம்பானி சங்கர், சத்யன், சேஷு, வாசு விக்ரம், பயில்வான் ரங்கநாதன், இவர்களுடன் கௌரவ வேடத்தில் லொள்ளுசபா ஜீவா நடித்துள்ளார்.
20 கிலோ குறைஞ்சிடுச்சு.. ஆனா ஸ்ட்ரெச் மார்க் இருக்கே.. தலைவிக்கு பிறகு கங்கனாவின் ட்ரான்ஸ்ஃபர்மேஷன்!
ஜே.வி. இசையையும், ஆனந்த் கேமராவையும், கோபி படத்தொகுப்பையும், சுரேஷ் நடனப்பயிற்சியையும், அருள்குமரன் இணைத்தயாரிப்பையும் கவனித்துள்ளனர்.
கிழக்கு கடற்கரை
சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் குறிப்பாக கிழக்கு கடற்கரை சாலை பகுதியிலும் வளர்ந்துள்ள இப்படத்தை சாரதிராஜா தயாரித்துள்ளார்.
படத்தின் கதை, திரைக்கதை , வசனம் , எழுதி இயக்கி உள்ள ரங்கா படத்தைப் பற்றி கூறியதாவது: இளமை துள்ளலுடன் திகிலும் மர்மமும் நிறைந்த படமாக உருவாக்கி இருக்கிறேன்.
விபத்தில் சிக்கினார்
இந்தப் படத்தில் திகில், மர்மத்துக்கு புதிய பரிமாணத்தை காட்டியிருக்கிறேன். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தபிறகு தான் யாஷிகா ஆனந்த் விபத்தில் சிக்கினார். அவர் இதில் கிளாமர் மட்டுமல்ல நடிப்பிலும் அசத்தி இருக்கிறார்.
Recommended Video
திரைப்பட விழாவில்
இந்தப் படத்தை பல்வேறு திரைப்பட விழாக்களுக்கு விண்ணப்பித்தோம். அதில் டொராண்டோ தமிழ் இண்டர்நேஷனல் திரைப்பட விழாவில் ஒளிப்பதிவாளர் ஆனந்துக்கு சிறந்த ஒளிப்பதிவுக்கான விருதினை பெற்றுத்தந்தது.
அடுத்து அமெரிக்காவில் நடைபெற்ற லாஸ் விகாஸ் திரைப்பட விழாவில் யாஷிகா ஆனந்துக்கு சிறந்த நடிகைக்கான விருது கிடைத்தது..கொல்கத்தாவில் நடைபெற்ற 'விர்ஜின் ஸ்பிரிங் திரைப்பட விழாவில் இந்த படத்தில் நாயகனாக நடித்துள்ள அசோக் அவர்களுக்கு சிறந்த நடிகருக்கான விருதும், சிறந்த முறையில் கதை சொல்லல், 'சிறந்த திரைக்கதை அமைத்தல், சிறந்த இயக்கம் என "பெஸ்டி" படத்தை எழுதி இயக்கியதுக்கு மூன்று விருதுகள் கிடைத்தது.
திரையிட ஏற்பாடு
மேலும் பல்வேறு திரைப்பட விழாக்களில் போட்டியில் கலந்துகொள்ளவும் தேர்வாகி உள்ளது.
"பெஸ்டி" திரைப்படம் எனக்கு மட்டுமல்ல இதில் பணியாற்றியுள்ள தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், நடிகர் நடிகைகளுக்கும் மிகச்சிறந்த புகழினையும், பாராட்டினையும், விருதுகளையும் பெற்றுத்தரும். விரைவில் திரையரங்குகளில் திரையிட ஏற்பாடு செய்து வருகிறோம்.." என்று கூறினார்.