Don't Miss!
- News வடசென்னையில் ஒரே ஆச்சரியம்.. வேலையை காட்டிய பாஜக.. கையில் "மை"யின் ஈரம் கூட காயலியே.. அதுக்குள்ளேயே?
- Finance வித்தியாசமா இருக்கே.. மாசம் ரூ.9 லட்சம் சம்பாதிக்கும் AI பெண் மாடல்..!
- Technology ஆர்டர் பிச்சிக்கும் பாருங்க.. ரூ.10,000 போதும்.. 108MP கேமரா.. 256GB மெமரி.. வருகிறது itel போன்.. எந்த மாடல்?
- Lifestyle தக்காளி சட்னி செய்யும் போது இந்த ஒரு பொருளை மட்டும் அதிகமா சேர்த்துக்கோங்க.. டேஸ்ட் சூப்பரா இருக்கும்..
- Sports மொத்த பேட்டிங் ஆர்டரும் மாறிப்போச்சு.. ருதுராஜ் செய்த சொதப்பல்.. சிஎஸ்கே தோல்விக்கு காரணம் என்ன?
- Automobiles பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
இந்திய பிரபலங்களை துரத்தும் கொரோனா.. அக்ஷய் குமாரை தொடர்ந்து இந்த பிரபல நடிகருக்கும் தொற்று உறுதி!
மும்பை: பிரபல பாலிவுட் நடிகர் கோவிந்தாவுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தொற்று இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது.
படப்பிடிப்புகளில் பிசியாக உள்ள நடிகர்களுக்கு தொடர்ந்து கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
விடாது கருப்பு
விடாது கருப்பு என்பது போல கடந்த ஆண்டு ஆரம்பத்தில் உலக நாடுகளை அச்சுறுத்த தொடங்கிய கொரோனா எனும் பெருந்தொற்று நோய் இன்னமும் பல்வேறு நாடுகளை பாடாய் படுத்தி வருகிறது. இந்தியாவில் குறைந்து வந்த கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது.
பதறும் பாலிவுட்
பாலிவுட் படங்களின் படப்பிடிப்புகளுக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்ட நிலையில் ஏகப்பட்ட முன்னணி நடிகர்களுக்கு தொடர்ந்து கொரோனா தொற்று பரவி வருகிறது. ரன்பீர் கபூர், ஆலியா பட், அக்ஷய் குமார் என ஏகப்பட்ட பிரபலங்கள் கொரோனா பாதிப்பால் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு வருகின்றனர். இதனால் பாலிவுட்டில் ஒரே பதற்றம் நிலவி வருகிறது.
படப்பிடிப்பு ரத்து
முன்னணி நடிகர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வரும் நிலையில், அவர்கள் நடித்து வரும் படங்களின் படப்பிடிப்பு மீண்டும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மகாராஷ்ட்ரா மாநிலத்தில் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், மீண்டும் ஒரு முழுமையான லாக்டவுன் வருமா? என்கிற அச்சமும் எழுந்துள்ளது.
கோவிந்தாவுக்கு கொரோனா
இன்று காலை பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் தனக்கு கொரோனா பாசிட்டிவ் ஆகி உள்ளது என அறிவித்த நிலையில், தற்போது பிரபல பாலிவுட் நடிகர் கோவிந்தாவுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. கூலி நம்பர் ஒன், ஹீரோ நம்பர் ஒன் என ஏகப்பட்ட பிளாக்பஸ்டர் படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார் கோவிந்தா.
பெரிய பாதிப்பு இல்லை
57 வயதை கடந்த நடிகர் கோவிந்தவுக்கு கொரோனா தொற்று பரவி உள்ள தகவல் பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை கிளப்பி உள்ளது. ஆனால், பெரிய பாதிப்பு இல்லை. சிறிய அறிகுறிகள் தான் உள்ளது. வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என நடிகர் கோவிந்தாவின் மனைவி சுனிதா அவுஜா தெரிவித்துள்ளார்.
மனைவிக்கு நெகட்டிவ்
நடிகர் கோவிந்தாவுக்கு கொரோனா பாசிட்டிவ் ஆகி உள்ள நிலையில், அவரது மனைவி சுனிதா மற்றும் குடும்பத்தினருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால், யாருக்குமே கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என்றும் பணியாட்கள் உள்பட அனைவருக்கும் நெகட்டிவ் என வந்துள்ளது என்றும் கூறியுள்ளார்.