Don't Miss!
- Technology
புண்பட்ட நெஞ்சை FREE டேட்டாவை வச்சு தேத்திக்கோங்க.. Vodafone அறிவித்துள்ள "அடேங்கப்பா" ஆபர்!
- News
முதுபெரும் தலைவர் நல்லக்கண்ணுக்கு உடல் நலம் பாதிப்பு..ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை
- Finance
சென்செக்ஸ் 670 புள்ளிகள் சரிவு.. 2 முக்கியக் காரணம்..!!
- Sports
திறமைகளை வளர்த்து கொள்ளுங்கள்.. இல்லை சூர்யகுமாரால் ஆபத்து வரும்.. நெஹ்ரா கொடுத்த எச்சரிக்கை
- Automobiles
ஷோரூம்களுக்கு வர தொடங்கிய மாருதியின் விலை குறைவான கார்! திருவிழா மாதிரி பொதுமக்கள் கூட்டம் கூடுதாம்!
- Lifestyle
சாணக்கிய நீதியின் படி இந்த நபர்கள் எதிரிகளை விட ஆபத்தானவர்களாம்... இவங்கள பக்கத்துலேயே சேர்க்காதீங்க...!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
அதிவேகமாக வந்த கார்… கட்டுப்பாட்டை இழந்து நீர் நிலைக்குள் கவிழ்ந்தது… உயிரிழந்த மராத்தி நடிகை!
கோவா : மராத்தி நடிகை ஈஸ்வரி தேஷ்பாண்டே கார் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அவருக்கு வயது 25.
இந்த விபத்தில் அவருடன் பயணம் செய்த காதலர் சுபாம் தாட்கேவும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
யோகி பாபுவுக்கு ஜோடியான ஓவியா.. தாறுமாறாக ரிட்டர்ன் ஆகத் துடிக்கும் தலைவி.. குவியும் வாழ்த்துக்கள்!
ஈஸ்வரி தேஷ்பாண்டேவின் திடீர் மரணம் மராத்தி மற்றும் இந்தி திரைத்துறையினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஈஸ்வரி தேஷ்பாண்டே
ஈஸ்வரி தேஷ்பாண்டே இந்தி மற்றும் மராத்தி திரைப்படத்தில் நடித்துள்ளார். தற்போது இவர் இரண்டு திரைப்படங்களில் நடித்து முடித்து உள்ளார். இந்த இரு திரைப்படங்களும் விரைவில் வெளியாக உள்ளது. படப்பிடிப்பில் பிஸியாக இருந்த ஈஸ்வரி தேஷ்பாண்டே ஓய்வுக்காக செப்டம்பர் 15ந் தேதி கோவாவுக்கு காரிலேயே தனது காதலர் சுப்பம் தாட்கேவுடன் சுற்றுலா சென்றுள்ளார்.

நீரில் மூழ்கி
சுற்றுலாவை முடித்துவிட்டு திங்கட்கிழமை காலை பார்டெஸ் தாலுகாவில் ஹட்ஃபேட் கிராமம் அருகே வந்து கொண்டிருந்த போது விபத்துக்குள்ளாகி அருகே இருந்த நீர் நிலைக்குள் கார் கவிழ்ந்தது. அந்த நீர் நிலையில் அதிக அளவு தண்ணீர் இருந்ததால் கார் விரைவாக மூழ்கியது. இதில், நடிகை ஈஸ்வரி தேஷ்பாண்டே மற்றும் அவரது காதலர் சுபாம் தாட்கேவும் உயிரிழந்தனர்.

மீட்க முடியவில்லை
இந்த துயர சம்பவம் 5:30 மணியளவில் நடந்ததாகக் கூறப்படுகிறது மற்றும் கார் உள்பக்கமாக பூட்டி இருந்ததால் அவர்களை விரைவாக மீட்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் கார் விபத்துக்குள்ளான போது, ஈஸ்வரி உதவி கேட்டு அழைத்ததாக சம்பவ இடத்தில் இருந்தவர்கள் தெரிவித்தனர்.
Recommended Video

கார் கட்டுப்பாட்டை இழந்தது
கார் அதிகவேகத்தில் சென்று கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து நடந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கட்டுப்பாட்டை இழந்த கார், எதிரே இருந்த சாலையில் சிறிது தூரம் சென்று அதன் பிறகே நீர்நிலைக்குள் கவிழ்ந்ததாக அஞ்சுனா காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுராஜ் கவாஸ் கூறினார். மேலும், இவர்கள் இருவரும் நள்ளிரவு பார்டிக்கு சென்று இருக்கலாம் என்றும், அதற்கு அடையாளமாக அவர்களது கையில் Wristband உள்ளதாக போலீஸ் அதிகாரி கூறினார்.

பெரும் சோகம்
ஈஸ்வரி தேஷ்பாண்டேவும் சுபம் தாட்கேவும் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலுக்கு இருவீட்டாரின் பெற்றோரும் சம்மதம் தெரிவித்து விட்டனர். இவர்களின் திருமணம் விரைவில் நடைபெற இருந்த நிலையில் கோர விபத்தில் சிக்கி இருவரும் உயிரிழந்துள்ளனர். இவர்களில் உயிரிழப்பு திரைத்துறையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.