அடடா.. சன்னி லியோனுக்கு எவ்ளோ பெரிய மனசு.. என்ன காரியம் பண்ணியிருக்காங்க பாருங்க!
Recommended Video
மும்பை: வெப் தொடரின் மூலம் கிடைத்த பணத்தை நடிகை சன்னி லியோன் பயன்படுத்திய விதம் ரசிகர்களை நெகிழ்ச்சியடைய செய்திருக்கிறது.
பாலிவுட் சினிமாவின் கவர்ச்சி நடிகைகளில் முக்கியமானவர் சன்னி லியோன். தொடக்கத்தில் ஆபாச படங்களில் நடித்த சன்னிக்கு பின்னர் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
பாலிவுட் சினிமாவின் முன்னணி கவர்ச்சி நடிகையாக வலம் வருகிறார். பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியிலும் பங்கேற்றார் சன்னி லியோன்.

வீரமாதேவி
இந்தி மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழி படங்களிலும் தலை காட்டிவிட்டார் சன்னி லியோன். அவருக்கு பாலிவுட் மட்டுமின்றி இந்தியா முழுக்கவுமே ரசிகர் பட்டாளம் உள்ளது. தற்போது தமிழில் வீரமாதேவி என்ற படத்தில் நடித்து வருகிறார்.

வெப் சீரிஸ்
இந்த படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. மேலும் ரங்கீலா என்ற மலையாள படத்திலும் நடித்து வருகிறார் சன்னி லியோன். மேலும் இந்தியில் உருவாகும் வெப் சீரிஸ் ஒன்றில் நடித்துள்ளார். இது முழுக்க முழுக்க காமெடி தொடர் என கூறப்படுகிறது.

ரசிகர்கள் மகிழ்ச்சி
இந்நிலையில் இந்த வெப் சீரிஸில் நடித்ததன் மூலம் தனக்கு கிடைத்த சம்பளத்தை மும்பையில் உள்ள ஒரு ஆதரவற்றோர் இல்லத்திற்கு சன்னி லியோன் நன்கொடையாக கொடுத்துள்ளார். இதனை கேட்ட ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சன்னி லியோன் கவர்ச்சியில் மட்டும் ஏழைகளுக்கு உதவுவதிலும் தாராளம் தான் என்று புகழ்ந்து வருகின்றனர்.

ஒரு பாடலுக்கு நடனம்
நடிகை சன்னி லியோன் டேனியல் வெபர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு சன்னி லியோன் இரண்டு குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். ஜெய் நடித்த வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி இருந்தார். இதேபால் மலையாளத்தில் மம்முட்டி நடித்த படத்திலும் ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











