ஐஸ்வர்யா ராய்க்கு ஒரு மகன் இருக்கிறாரா?.. பாலிவுட்டில் கிளம்பிய புது பரபரப்பு

மும்பை: பாலிவுட் உலகில் கடந்த சில காலமாக பரபரப்பாக பேசப்படும் விஷயங்களில் ஒன்று ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் விவாகரத்து செய்யப்போகிறார்கள் என்பதுதான். அதில் உண்மை இல்லை என்று கூறப்பட்டாலும் தொடர்ந்து அந்த கிசுகிசு பரவியேவருகிறது. இதுகுறித்து இருவருமே தங்களது செயல்பாடுகள் மூலம் பதிலளித்துவருகின்றனர்.

ஐஸ்வர்யா ராய் என்றாலே உலக அழகி என்ற நினைவுதான் ரசிகர்களிடம் வரும். 90களில் உலக அழகி பட்டம் வென்ற அவரை இந்தியாவில் பலரும் இன்றுவரை உலக அழகியாகவே கொண்டாடிவருகிறார்கள். கோலிவுட்டில் அவர் அறிமுகமானாலும் அவரின் கவனம் பெரும்பாலும் பாலிவுட்டிலேயே இருந்தது. அங்கு ஏராளமான ஹிட் படங்களில் நடித்து பெரும் ரவுண்டு வந்தார். அதேபோல் தமிழிலும் மணிரத்னம், ஷங்கர், ராஜீவ் மேனன் உள்ளிட்ட இயக்குநர்களின் படங்களில் நடித்திருக்கிறார்கள்.

aishwarya rai abishek bachchan

சல்மான் கானுடன் காதல்: அவர் பாலிவுட்டில் பீக்கில் இருந்தபோது நடிகர் சல்மான் கானை காதலித்தார். சில வருடங்கள் இரண்டு பேருமே தீவிரமாக காதலித்தார்கள். நிச்சயம் திருமணம் செய்துகொள்வார்கள் என்று ஆரூடம் கூறப்பட்ட சூழலில்; தங்களுக்குள் ஒத்துவராததால் இருவரும் பிரிந்தனர். அதற்கு காரணம் சல்மான் கான் ஐஸ்வர்யாவை ரொம்பவே டார்ச்சர் செய்துவிட்டார் என்று சொல்லப்பட்டது. இருந்தாலும் தங்களது பிரிவு குறித்து இருவருமே எதுவும் பேசவில்லை.

பச்சன் குடும்பத்து மருமகள்: சல்மானுடனான பிரிவுக்கு பிறகு நடிகர் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்துகொண்டார் ஐஸ். அவர்களுக்கு ஆராத்யா என்ற மகள் இருக்கிறார். பல வருடங்களாக இரண்டு பேரும் காதலோடும், அனுசரனையோடும் தங்களது வாழ்க்கை நகர்த்திவருகிறார்கள். மேலும் பாலிவுட்டின் ஃபேவரைட் ஜோடி என்ற அந்தஸ்தையும் அவர்கள் பெற்றிருக்கிறார்கள். அதுமட்டுமின்றி வாழ்ந்தால் அவர்கள் போல் வாழ வேண்டும் என்ற பெயரையும் பெற்றிருக்கிறார்கள்.

குடும்பத்தில் பிரச்னை?: சூழல் இப்படி இருக்க கடந்த சில காலமாக இருவருக்கும் பிரச்னை என்று கூறப்படுகிறது. ஐஸ்வர்யா ராயை அபிஷேக்கின் தாய் ஜெயா ஓவராக அதிகாரம் செய்கிறார்; அதனால் கடுப்பான ஐஸ்வர்யா தனது குழந்தையும் தன் தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார் என்றெல்லாம் கிளப்பிவிடப்பட்டது. ஆனால் அதனை ஜெயா மறுத்து; ஐஸ்வர்யாவை நான் எப்போதும் அதிகாரம் செய்ததில்லை என்று விளக்கம் கொடுத்தார். அபிஷேக்கும் தங்களுக்குள் விவாகரத்தெல்லாம் என்று கூறினார்.

முற்றுப்புள்ளி வைத்த ஐஸ்வர்யா: இது ஒருபக்கம் இருக்க திருமணத்தின்போது போடப்பட்ட மோதிரத்தை ஐஸ்வர்யா கழற்றிவிட்டார்; எனவே விவாகரத்து உறுதி என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் அந்த மோதிரத்தை போட்டுக்கொண்டு பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். மேலும் சமீபத்தில் அமிதாப் பச்சனின் பிறந்தநாளுக்குக்கூட தனது வாழ்த்தினை தெரிவித்து விவாகரத்து சர்ச்சையை கிளப்பியவர்களை கப் சிப் என்று ஆக்கினார்.

புது பஞ்சாயத்து: இந்நிலையில் புதிய பரபரப்பு ஒன்று உருவாகியிருக்கிறது. அதாவது சங்கீத் குமார் என்ற ஒருவர் தான் ஐஸ்வர்யா ராயின் மகன்; அவருக்கு திருமணம் ஆவதற்கு முன்பே அவருக்கு நான் IVF In Fertilization மூலம் லண்டனில் பிறந்தேன். அதற்கு ஐஸ்வர்யா ராயின் பெற்றோர் என்னை விசாகப்பட்டினத்துக்கு அழைத்து சென்று வளர்த்தார்கள் என்று கூறுகிறார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் அந்த நபருக்கு மனநிலை சரியில்லை. அதனால்தான் அப்படி கூறுகிறார் என்பது உறுதியாகியிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X