Don't Miss!
- News பெங்களூர் ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பில் முதல் அரெஸ்ட்.. முஸம்மில் ஷரீப் என்பவரை கைது செய்த என்ஏஐ
- Sports RR vs DC : 36-3.. திடீரென உள்ளே புகுந்த அஸ்வின்.. அடுத்தடுத்து பறந்த சிக்சர்கள்.. தப்பிய ராஜஸ்தான்!
- Automobiles உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
தொடர்ந்து மிரட்டும் கொரோனா.. பிரபல நடிகர் அனுபம் கெர் குடும்பத்தில் 4 பேருக்கு தொற்று உறுதி!
மும்பை: பிரபல நடிகர் அனுபம் கெர் குடும்பத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மும்பையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், நடிகர் அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன் ஆகியோருக்கும் பாதிப்பு ஏற்பட்டது.
இதையடுத்து தனியார் மருத்துவமனையில் அவர்கள் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர். இரண்டாவது பரிசோதனையில் நடிகை ஐஸ்வர்யா ராய்க்கும் அவர் குழந்தைக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பிரபல இந்தி நடிகர் அனுபம் கெர் குடும்பத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
இந்தியில் ஏராளமான படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்துள்ள இவர், தமிழில், பிரபுதேவாவின் வி.ஐ.பி. படத்தில் நடித்திருந்தார்.
இவரது குடும்பத்தில் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில், எனது தாயார் துலாரிக்கு லேசான கொரோனா பாதிப்பு காணப்பட்டது. இதனால், அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளோம்.
அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சனுக்கு கொரோனா.. விரைவில் குணமடைய இந்திய திரையுலகமே பிரார்த்தனை!
எனது சகோதரர், அவரது மனைவி மற்றும் மருமகள் ஆகியோர் மிக கவனமுடன் இருந்தும் லேசான பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. அவர்கள் வீட்டிலேயே தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். எனக்கும் பரிசோதனை நடத்தப்பட்டது. பாதிப்பு இல்லை என தெரிய வந்துள்ளது என கூறியுள்ளார்.