Don't Miss!
- News இளையராஜாவுக்கு சான்ஸ் கொடுத்த நாகூர் ஹனீபா.. எம்எல்ஏ ஹாஸ்டலில் "தென்றல் காற்றே" உருவான கதை!
- Technology கைக்கு 2 ஆர்டர்.. அவ்ளோ கம்மி.. AMOLED டிஸ்பிளே.. ப்ளூடூத் காலிங்.. ஹெல்த் டிராக்கர்கள்.. எந்த மாடல்?
- Sports இதுதான் ரியல் ட்விஸ்ட்.. ஓய்வுக்கு பின் சிஎஸ்கே அணியின் முக்கிய பதவிக்கு வரப்போகும் தல தோனி?
- Finance ஜப்பானுக்கு இந்தியா தான் உதயசூரியன்.. கலரே மாறுதே.. சீனாவுக்கு பெரும் இழப்பு..!!
- Automobiles தண்ணீரை சேமிக்க இப்படி ஒரு வழியா? இனி ரயில்களில் 1லிக்கு பதிலாக 500 மிலி தண்ணீர் மட்டும் வழங்க முடிவு!
- Lifestyle கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ரூ.37 லட்சம் பணத்தை வாங்கிவிட்டு ஏமாற்றி விட்டார்… பிரபல நடிகைக்கு எதிராக பிடிவாரண்டா ?
மும்பை : பிரபல பாலிவுட் நடிகைக்கு மோசடி வழக்கில் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
உத்தரப்பிரதேச மாநிலம் மொரதாபாத்தை சேர்ந்த பிரமோத் சர்மா என்பவர் 2019ம் ஆண்டு பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹாவை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வைக்க முன்பணமாக ரூ.37 லட்சம் கொடுத்திருந்தார்.
ஆனால் பணத்தை வாங்கிக்கொண்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மறுத்துவிட்டார் என குற்றம்சாட்டினார்.
ஏகே61 படத்தின் கதை இதுவா...இன்று டைட்டில் வெளியாகுமா?
ஏமாற்றிவிட்டார்
பிரமோத் சர்மா தான் கொடுத்த ரூ.37 லட்சத்தை திரும்ப கொடுக்கும்படி சோனாக்ஷி சின்ஹாவிடம் கேட்டார். ஆனால் அந்த பணத்தையும் சோனாக்ஷி சின்ஹா கொடுக்க மறுத்துவிட்டார் என சொல்லப்படுகிறது. இதனால் சர்மா மொரதாபாத் மாவட்ட நீதிமன்றத்தில் சோனாக்ஷி சின்ஹா மீது மோசடி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு உத்தரபிரதேச மாநிலம் மொரதாபாத் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
பிடிவாரண்ட்
இந்நிலையில், நடிகை சோனாஷிக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் விரைவில் கைது செய்யப்படுவார் என்று கடந்த இரண்டு நாட்களாக இணையத்தில் செய்திகள் பரவி வருகின்றன. இந்த செய்திக்கு விளக்கம் அளித்துள்ள சோனாஷி சின்ஹா, எனக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஒரு வதந்தி பரவி வருகிறது.
ஊடகங்கள் விசாரிக்காமல்
இந்த செய்தியை ஊடங்கள் சரிவர விசாரிக்காமல் வெளியிட்டுள்ளனர். இது போன்ற செய்திகள் வரும் போது சம்மந்தப்பட்டவரிடம் விசாரித்துவிட்டு ஊடகங்கள் செய்தியை வெளியிட வேண்டும். இது முற்றிலும் புனையப்பட்ட கதை. இந்த விவகாரத்தில் தனது வழக்கறிஞர் குழு சட்ட நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இது போன்ற வதந்திகளை வெளியிடுவதை ஊடகங்கள் தொடர்ந்து செய்து வருகின்றன. பல ஆண்டுகளாக நான் பொறுமையை கடைபிடித்து வருகிறேன்.
நற்பெயரை கெடுக்க
என் நற்பெயரை கெடுக்கவும், என்னிடம் விளம்பரத்தைப் பெறவும், என்னிடம் பணம் பறிக்கவும் அந்த நபர் முயற்சிக்கிறார். இந்த வழக்கு முராதாபாத் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. முராதாபாத் நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் வரை இந்த விஷயத்தில் எனது கருத்து இதுதான், எனவே தயவுசெய்து என்னை அணுக வேண்டாம். நான் வீட்டில் இருக்கிறேன், எனக்கு எதிராக எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்று கூறியுள்ளார்.