திருமணமான 7 மாதத்திலேயே குழந்தையை பெற்ற தனுஷ் பட நடிகை.. குழப்பத்தில் ரசிகர்கள்!
சென்னை: பாலிவுட் நடிகை ஸ்வாரா பாஸ்கருக்கு திருமணமான ஏழே மாதத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளதால், நெட்டிசன்கள் அவரை கிண்டலடித்து வருகின்றனர்.
வெள்ளித்திரை நடிகையான ஸ்வாரா 2009 ஆம் ஆண்டு வெளியான மாதோலால் கீப் வாக்கிங் சீரியல் மூலம் தனது திரைவாழ்க்கையை தொடங்கினார்.

நடிகை ஸ்வாரா பாஸ்கர்: நடிகர் தனுஷ் பாலிவுட்டில் என்ட்ரி கொடுத்த ராஞ்சனா என்ற படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்து பாராட்டை பெற்றார். இந்த படத்தில் சிறப்பாக நடித்ததற்காக இவருக்கு பிலிம் பேர் விருது கிடைத்தது. தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருந்த இவர், சமாஜ்வாதி கட்சியின் இளைஞரணி தலைவரும், இளைஞர் தலைவருமான ஃபஹத் அகமதுவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
பெண் குழந்தைக்கு தாயானார்: இவர்களின் திருமணம் பிப்ரவரி மாதம் நடைபெற்ற நிலையில், தான் கர்ப்பமாக இருக்கும் மகிழ்ச்சியான செய்தியை கடந்த மே மாதம் புகைப்படத்துடன் வெளியிட்டு இருந்தார். இந்த தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வந்த நிலையில், செப்டம்பர் 23ந் தேதி இவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.

குவியும் வாழ்த்து: இந்த மகிழ்ச்சியான தகவலை நடிகை ஸ்வாரா அவருடைய இணைய பக்கத்தில் போட்டோவுடன் வெளியிட்டுள்ளார். அதில், பிரார்த்தனை கடவுளிடம் கேட்டுவிட்டு, ஒரு ஆசீர்வாதம் வழங்கப்பட்டுள்ளது. ஒரு பாடல் கிசுகிசுத்தது, ஒரு மாய உண்மை.. எங்கள் பெண் குழந்தை ராபியா 23 செப்டம்பர் 2023 அன்று பிறந்தார் என பதிவிட்டிருந்தார்.
கிண்டலடிக்கும் பேன்ஸ்: இவரின் இந்த பதிவிற்கு ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரமுகர்களும் அன்பையும் வாழ்த்துக்களையும் குவித்துள்ளனர். நீனா குப்தா, கொங்கோனா சென் ஷர்மா, டிஸ்கா சோப்ரா மற்றும் குனீத் மோங்கா போன்ற முக்கிய நபர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். ஆனால், சில நெட்டிசன்களோ திருமணமாகி ஏழு மாதங்கள் கூட ஆகவில்லை அதுக்குள்ள குழந்தையா என்றும், அப்போது திருமணத்திற்கு முன்னே கர்ப்பமாக இருந்தீங்களா என்றும் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.



Click it and Unblock the Notifications











