twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    என் உயிருக்கு ஆபத்து..இவர்தான் காரணம்..இன்ஸ்டாவை அலற விட்ட பிரபல நடிகை!

    |

    சென்னை : பிரபல நடிகை என் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் அப்படி தனக்கு ஏதாவது நேர்த்தால், அவர்தான் காரணம் என பிரபல இயக்குநரின் பெயரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு புயலை கிளப்பி உள்ளார்.

    பிரபல நடிகையான தனுஸ்ரீ தத்தா இந்தியில், ஆசிக் பனாயா அப்னே என்ற இந்தி படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். தொடர்ந்து, தமிழ், தெலுங்கு, மலையாளத் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

    தமிழில் இவர் விஷாலுடன் தீராத விளையாட்டு பிள்ளை என்ற படத்தில் ஜோதி என்ற கதாபாத்தில் நடித்திருந்தார்.

    தோழியுடன் மன்மத லீலை: இது என்னடா புது ஐட்டமா இருக்கு? சர்ச்சையில் சிக்கிய யாஷிகா ஆனந்த்!தோழியுடன் மன்மத லீலை: இது என்னடா புது ஐட்டமா இருக்கு? சர்ச்சையில் சிக்கிய யாஷிகா ஆனந்த்!

    தனுஸ்ரீ தத்தா

    தனுஸ்ரீ தத்தா

    பிரபல நடிகையான தனுஸ்ரீ தத்தா நானே படேகர் படத்தில் நடித்து கொண்டிருந்தபோது, metoo புகாரில் நடிகர் நானா படேகர் பாலியல் ரீதியாக தன்னை துன்புறுத்தியதாக குற்றஞ்சாட்டியிருந்தார். ஆனால், போதிய ஆதாரங்கள் எதுவும் இல்லாததால், அந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டுவிட்டது.

    பாதுகாப்பு இல்லை

    பாதுகாப்பு இல்லை

    நடிகை தனுஸ்ரீ,கடந்த வாரம் இஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவினை போட்டிருந்தார். அதில் பாலிவுட் மாபியாக்களும், அரசியல்வாதிகளும், சமூக விரோத கிரிமினல்களும் தன்னை துற்புறுத்துவதாகவும். மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சியை கொண்டு வரவேண்டும். இங்கே என்னைப் போன்றவர்களுக்கு எந்தவிதமான பாதுகாப்பும் இல்லை என்னை காப்பாற்றுங்கள் என எழுதிஇருந்தார்.

    பாலிவுட் மாஃபியா யார்?

    பாலிவுட் மாஃபியா யார்?

    இதையடுத்து, இப்போது மீண்டும் சில புதிய குற்றச்சாட்டுக்களை முன் வைத்துள்ளார். இதில், எனக்கு ஏதேனும் நேர்ந்தால், #metoo குற்றம் சாட்டப்பட்ட நானா படேகர், அவரது வழக்கறிஞர்கள், அவரது கூட்டாளிகள் மற்றும் அவரது பாலிவுட் மாஃபியா நண்பர்கள் தான் காரணம் என்பதை அனைவருக்கும் தெரிவித்துக்கொள்கிறேன். பாலிவுட் மாஃபியா யார்?? எஸ்.எஸ்.ஆர் அதாவது சுஷாந்த் சிங் மரண வழக்கில் அனைவரின் பெயர்களும் அடிக்கடி வந்த அதே நபர்கள்தான்.

    அவர்கள் தான் காரணம்

    அவர்கள் தான் காரணம்

    அவர்களின் திரைப்படங்களைப் பார்க்காதீர்கள், அவற்றை முற்றிலுமாகப் புறக்கணித்து, அவர்களை கொடூரமான பழிவாங்குங்கள். என்னைப் பற்றியும் என் நபர்களைப் பற்றியும் போலிச் செய்திகளைப் பரப்பிய அனைத்துத்துறை பத்திரிகையாளர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அவர்கள் என்னை மிகவும் துன்புறுத்தினார்கள். அவர்களின் வாழ்க்கை நிச்சயம் ஒருநாள் நரகமாகும். சட்டமும் நீதியும் என்னைத் தவறவிட்டிருக்கலாம் ஆனால் மக்கள் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. ஜெய் ஹிந்த்... விடைபெறுகிறேன் என பதிவிட்டுள்ளார்.

    English summary
    Bollywood actress Tanushree Dutta recently made some startling revelations in an Instagram post, sharing how she continues to face “severe mental, physical and psychological harassment”
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X