Don't Miss!
- Automobiles 140 பேர் தான் இந்த ஸ்கூட்டரை வாங்க முடியும்! அதுக்கு மேல எவ்வளவு கோடி குடுத்தாலும் கிடைக்காது!
- Sports அமுக்கு டுமுக்கு அமால் டுமால்.. தல கொஞ்சம் தள்ளி நில்லுங்க.. சிஎஸ்கேவை வெளுக்கும் தரமான மீம்ஸ்!
- News லோக்சபா தேர்தல் முடிந்தாலும்.. தமிழகத்தில் சில இடங்களில் பறக்கும் படை சோதனை தொடருமாம்! ஏன் தெரியுமா
- Lifestyle Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
ஆபாச பட விவகாரத்தில் சிக்கிய பிரபல நடிகை.. மீண்டும் டாப்லெஸ் போட்டோஷூட் நடத்தி மிரட்டி இருக்காரு!
மும்பை: ஆபாச பட விவகாரத்தில் கைது செய்யபட்ட நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா எடுத்த ஆபாச படங்களில் நடித்த நடிகை கெஹனா வசிஸ்த் மீண்டும் டாப்லெஸ் போட்டோஷூட் நடத்தி உள்ளார்.
ஆசியாவின் பிகினி அழகி பட்டத்தை வென்ற கெஹனா வசீஸ்த் முழு நிர்வாணமாகவே ஆபாச படங்களில் நடித்துள்ளார்.
ஆண் குழந்தைக்கு அம்மாவானார் விஜய் டிவி சீரியல் நடிகை… வாழ்த்து பிரபலங்கள் !
கடந்த பிப்ரவரி மாதம் 87க்கும் மேற்பட்ட ஆபாச படங்களில் நடித்து உள்ளதாக இவர் மீது வழக்கு தொடரப்பட்டு போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
கெஹனா வசிஸ்த்
செக்ஸியான வெப் தொடர்களை தயாரித்து வரும் ஆல்ட் பாலாஜி நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியான கந்திபாத்தில் நடித்து பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் வைரலானவர் தான் இந்த கெஹனா வசிஸ்த். இவரது உண்மையான பெயர் வந்தனா திவாரி. மேலும், கென்ரின் தயாரிப்பு நிறுவனம் தயாரித்த பல ஆபாச படங்களிலும் இவர் நடித்துள்ளார்.
அதிரடி கைது
ஆசியாவின் பிகினி அழகி பட்டம் வென்ற கெஹனா வசிஸ்த் தொடர்ந்து கவர்ச்சி ராணியாக பாலிவுட்டில் கலக்கி வந்தார். ஆல்ட் பாலாஜி உள்ளிட்ட ஒடிடி தயாரிப்பு நிறுவனங்கள் தயாரித்த பல படங்களில் ஆடைகள் இன்றி ஆபாசமாக நடித்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் 87 ஆபாச படங்களில் கெஹனா வசிஸ்த் நடித்ததாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு 4 மாதங்கள் சிறை தண்டனையும் அனுபவித்தார்.
அதிரடியாக மறுப்பு
ஆபாச பட விவகாரத்தில் ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா கைது செய்யப்பட்ட நிலையில், நடிகை கெஹனா, நாங்க எடுத்த எந்த படமும் ஆபாச படங்கள் இல்லை என்றும் அவை அனைத்தும் எரோடிகா எனும் கவர்ச்சி படங்கள் என்றும் பரபரப்பு அறிக்கை வெளியிட்டார்.
போலீஸார் 15 லட்சம் கேட்டனர்
மேலும், மும்பை போலீசார் தன்னை கைது செய்யாமல் இருக்க தன்னிடம் ரூ. 15 லட்சத்துக்கு டீல் பேசியதாகவும் அதை தர மறுத்த நிலையிலேயே இப்படி அடுக்கடுக்கான பொய் வழக்குகளை தன் மீது போட்டு தன்னை துன்புறுத்துகின்றனர் என்றும் கூறி பரபரப்பை கிளப்பினார்.
மீண்டும் ஆபாச ஆட்டம்
ஏற்கனவே ஆபாச பட விவகாரத்தில் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்று திரும்பிய நிலையில், கொஞ்ச காலம் அமைதியாக இருந்த நடிகை கெஹனா வசிஸ்த் தற்போது மீண்டும் ஆபாச ஆட்டத்தை ஆரம்பித்துள்ளார். மேலாடை அணியாமல் டாப்லெஸ் ஆக அவர் எடுத்துள்ள போட்டோஷூட் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு தற்போது வைரலாக்கி உள்ளார்.
இதுவும் ராஜ்குந்த்ரா எடுத்தாரா
மீண்டும் டாப்லெஸ் போட்டோக்களை நடிகை கெஹனா வசிஸ்த் எடுத்து வெளியிட்ட நிலையில், இந்த போட்டோக்களையும் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவே ரசித்து எடுத்தாரா என பாலிவுட் நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.
அவரை விட்ருங்க
புதிய டாப்லெஸ் போட்டோக்கள் வைரலான நிலையில், அது தொடர்பாக ஏகப்பட்ட ட்ரோல்களும் தயாரிப்பாளர் ராஜ் குந்த்ராவை கோர்த்து விட்டு டிரெண்டாக நடிகை கெஹனா வசிஸ்த் இந்த போட்டோக்களுக்கும் நீங்க ட்ரோல் செய்யும் நபருக்கும் சம்பந்தமில்லை. அவரை விட்ருங்க என பதிலும் அளித்துள்ளார்.
போர்வை மட்டுமே
ஆபாச படங்களில் நடித்தது மட்டுமின்றி இளம் பெண் ஒருவரை கட்டாயப்படுத்தி ஆபாச படத்தில் நடிக்க வைத்த குற்றத்திற்காகத்தான் நடிகை கெஹனா வசிஸ்த் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், ஆடை ஏதும் அணியாமல் படுக்கை அறையில் போர்வையை மட்டுமே வைத்து தனது உடலை மறைத்தபடி படு கவர்ச்சியாக இந்த போட்டோஷூட்டை நடத்தி மிரட்டி உள்ளார் கெஹனா வசிஸ்த்.