ஜோஷ் ஆப் ஸ்டார் பூமிகா மோடிக்கு அடித்த ஜாக்பாட்.. சல்மான் கானை IIFA 2022ல் சந்திக்க போறாரு!
சென்னை: "இந்தியாவின் மிகப்பெரிய ஷார்ட் வீடியோ செயலியான ஜோஷ் (Josh) ஆப், தனது வித்தியாசமான கன்டென்ட்கள் மூலம் வீடியோ உலகில் புதிய உயரம் தொட்டு இருக்கிறது. கடந்த 2020ம் வருடம்தான் இந்த செயலி தொடங்கப்பட்டு இருந்தாலும் ஏற்கனவே இது டாப் ஷார்ட் வீடியோ செயலியாக உருவெடுத்துவிட்டது. அதேபோல் கலைஞர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த மேடை அமைத்து கொடுப்பதிலும் ஜோஷ் (Josh) செயலிதான் நம்பர் ஒன்.

திறமையாளர்களின் சங்கமமாக திகழும் ஜோஷ் ஆப்பின் முன்னணி பிரபலமான பூமிகா மோடிக்கு மிகப்பெரிய ஜாக்பாட் அடித்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இந்தி ஜோஷ் கம்யூனிட்டியில் மிகவும் பிரபலமான இவருக்கு தற்போது அபுதாபியில் வரும் ஜூன் 2 முதல் 4ம் தேதி வரை நடைபெற உள்ள சர்வதே இந்திய திரைப்படக் குழு (IIFA - International Indian Film Academy) சார்பில் நடைபெற பிரம்மாண்டமான திரைப்பட விழாவில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

அதுமட்டுமின்றி, பாலிவுட்டின் முன்னணி நடிகர் சல்மான்கானை நேரில் சந்தித்து அவருடன் உரையாடும் வாய்ப்பும் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜும்பா ஃபிட்னஸ் பயிற்சியாளரான பூமிகா, நாடக கலைஞராகவும் புகழ்பெற்று விளங்குகிறார். மிஸ்ட்ரெஸ் மகாராஷ்ட்ரா 2017, மிஸ்ட்ரெஸ் இந்தியா 2019, குஜராத்தின் முதல் கார்பா குயின் 2017 உள்ளிட்ட ஏகப்பட்ட அழகிப் பட்டங்களையும் இதுவரை வென்றிருக்கிறார் இவர்.

பாலிவுட் நடிகைகளான மாதுரி தீக்ஷித் மற்றும் மலைகா அரோரா போன்ற முன்னணி நடிகைகளுடன் டிவி விளம்பரங்களிலும் இவர் இணைந்து நடித்துள்ளார். ஜோஷ் ஆப்பில் ஏகப்பட்ட வீடியோக்களை இவர் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

அன்னை தெரேசா விருது மற்றும் தாதாசாகேப் பால்கே விருது உள்ளிட்டவற்றையும் பூமிகா பெற்றுள்ளார். ஜோஷ் ஆப்பில் நடனம், அழகு குறிப்புகள் மற்றும் ஃபேஷன் சம்பந்தமான பதிவுகளை இவர் பதிவிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி உள்ளார்.
தன்னைப் பற்றிய விவரங்களை பூமிகா பகிர்ந்து கொண்டபோது, "பூமிகா மோடி என என்னை அழைப்பதில் பெருமைக் கொள்கிறேன். ஒரு தாயாகவும், மனைவியாகவும், டான்ஸராகவும் எனக்கு பிடித்த விஷயங்களை விருப்பத்துடன் அதிக ஈடுபாட்டுடன் செய்து வருகிறேன். காலம் தவறாமையை எப்போதுமே கடைபிடித்து வருகிறேன். கர்மாவையும் கடவுளையும் அதிகமாக நம்புபவள் நான். நாம் இருக்கும் இடத்தையும், நம்மை சுற்றி இருப்பவர்களையும் எப்போதும் மகிழ்ச்சியாக வைத்துக் கொண்டால், நம் வாழ்க்கை நிச்சயம் மகிழ்ச்சியாக இருக்கும் என்பதை நம்புகிறேன்" என பேசியுள்ளார்.

மேலும், ஜோஷ் ஆப் குறித்து அவர் தனது கருத்துக்களையும் முன் வைத்துள்ளார். "ஜோஷ் செயலியுடனான எனது பயணம் ரொம்பவே இனிமையாக உள்ளது. எனது திறமைகளை அதிகமான மக்கள் மத்தியில் கொண்டு செல்ல இந்த ஆப் ரொம்பவே பயனுள்ளதாக உள்ளது. பல வழிகளில் நம்மை பிரபலப்படுத்தி வருகின்றன. ஏகப்பட்ட ஆச்சர்யங்களையும் அளித்து உத்வேகப்படுத்தி வருகின்றனர்" எனக் கூறியுள்ளார்.

பூமிகா மோடி போல நீங்களும் ஆக வேண்டுமா? அப்போது உடனடியாக ஜோஷ் ஆப் உடன் இணையுங்கள்.


Click it and Unblock the Notifications











