Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
லாக்டவுனையும் மீறி இர்ஃபான் இறுதிச்சடங்கில் கலந்து கொண்ட பாலிவுட் பிரபலங்கள்!
மும்பை: அரியவகை புற்றுநோய் காரணமாக அவதிப்பட்டு வந்த பாலிவுட் நடிகர் இர்ஃபான் கான் இன்று காலை இயற்கை எய்தினார்.
கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முன்னணி நடிகரான இர்ஃபான் கான் இறப்புக்கு பல பாலிவுட் நடிகர்கள் நேரில் சென்று இறுதி அஞ்சலி கூட செலுத்த முடியாத நிலை உருவாகி இருக்கிறது.
இந்தியாவே அழுகிறது.. சிறந்த நடிகரை இழந்த சினிமா துறை.. பிரபலங்கள் கண்ணீர் மல்க இரங்கல்
இந்நிலையில், பாலிவுட் பிரபலங்களான கபில் ஷர்மா மற்றும் மிகா சிங் ஆகிய இருவரும் லாக்டவுனையும் மீறி நெருங்கிய நண்பரும் நடிகருமான இர்ஃபான் கானின் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டதாக புகைப்படங்களுடன் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இன்று மதியம் 3 மணி அளவில் மும்பையில் உள்ள வெர்சோவா கப்ரஸ்தான் எனும் இடத்தில் புதைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இர்ஃபான் கான் மனைவி சுதாப்பா சிக்தர் அவரது இரண்டு குழந்தைகள், நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என மிக சிலரே இறுதிச்சடங்கில் கலந்து கொண்டனர்.
இர்ஃபான் கான் மறைவுக்கு இந்திய திரையுலகத்தை சேர்ந்த பல பிரபலங்களும் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். பிரதமர் மோடி, எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி என அரசியல் தலைவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களான சச்சின் டெண்டுல்கர், சாய்னா நேவால் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.