Don't Miss!
- Automobiles இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
லாக்டவுனையும் மீறி இர்ஃபான் இறுதிச்சடங்கில் கலந்து கொண்ட பாலிவுட் பிரபலங்கள்!
மும்பை: அரியவகை புற்றுநோய் காரணமாக அவதிப்பட்டு வந்த பாலிவுட் நடிகர் இர்ஃபான் கான் இன்று காலை இயற்கை எய்தினார்.
கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முன்னணி நடிகரான இர்ஃபான் கான் இறப்புக்கு பல பாலிவுட் நடிகர்கள் நேரில் சென்று இறுதி அஞ்சலி கூட செலுத்த முடியாத நிலை உருவாகி இருக்கிறது.
இந்தியாவே அழுகிறது.. சிறந்த நடிகரை இழந்த சினிமா துறை.. பிரபலங்கள் கண்ணீர் மல்க இரங்கல்
இந்நிலையில், பாலிவுட் பிரபலங்களான கபில் ஷர்மா மற்றும் மிகா சிங் ஆகிய இருவரும் லாக்டவுனையும் மீறி நெருங்கிய நண்பரும் நடிகருமான இர்ஃபான் கானின் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டதாக புகைப்படங்களுடன் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இன்று மதியம் 3 மணி அளவில் மும்பையில் உள்ள வெர்சோவா கப்ரஸ்தான் எனும் இடத்தில் புதைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இர்ஃபான் கான் மனைவி சுதாப்பா சிக்தர் அவரது இரண்டு குழந்தைகள், நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என மிக சிலரே இறுதிச்சடங்கில் கலந்து கொண்டனர்.
இர்ஃபான் கான் மறைவுக்கு இந்திய திரையுலகத்தை சேர்ந்த பல பிரபலங்களும் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். பிரதமர் மோடி, எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி என அரசியல் தலைவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களான சச்சின் டெண்டுல்கர், சாய்னா நேவால் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.