மாதுரி தீட்சித்தை முதல் நாளே ஜாக்கெட்டை கழட்ட சொன்னேன்.. அமிதாப் படத்தில் நடந்த பெரிய சம்பவம்!
மும்பை: மாதுரி தீட்சித்தை (Madhuri Dixit) ஜாக்கெட்டை கழட்டி விட்டு வெறும் பிராவுடன் முதல் நாள் ஷூட்டிங்கிலேயே நிற்க சொன்னதாக அமிதாப் பச்சன் படத்தை இயக்கிய இயக்குனர் டினு ஆனந்த் (Tinu Anand) சமீபத்திய பேட்டியில் பேசி பரபரப்பை கிளப்பி உள்ளார்.
மாதுரி தீக்ஷித் அப்போது பெரிய நடிகை கிடையாது. ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தார். 1989ம் ஆண்டு வெளியான Shanakht படத்தின் முதல் நாள் படப்பிடிப்பு தளத்தில் நடந்த பெரிய பஞ்சாயத்து குறித்து வெளிப்படையாக பேசி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளார் டினு ஆனந்த்.

சினிமாவில் நடிகைகள் வெறும் ஜாக்கெட் உடன் நடிப்பது, டவல் கட்டிக் கொண்டு நடிப்பது, பாவடை கட்டிக் கொண்டு நடிப்பது, வெறும் உள்ளாடையுடன் நடிப்பது, உச்சகட்டமாக நிர்வாணமாகவே நடிப்பது என பல படங்களில் போல்டான நடிப்பை அந்த படத்தின் கதைக்கு ஏற்ப நடித்து வருகின்றனர்.
அமிதாப் பச்சன் படத்தில் நடந்த சம்பவம்: இந்நிலையில், அமிதாப் பச்சனை வைத்து டினு ஆனந்த் இயக்கிய சனாகத் படத்தின் முதல் நாள் ஷூட்டிங்கில் வில்லன்களால் ஹீரோ அமிதாப் பச்சன் கயிற்றில் கட்டப்பட்டு கிடக்க அவரை வில்லன்களிடம் இருந்து காப்பாற்ற தன்னையே ஆஃபர் செய்யும் விதமாக மாதுரி தீட்சித் தனது ஜாக்கெட்டை கழட்டி விட்டு வெறும் பிராவுடன் நிற்க வேண்டும் என்கிற சீன் தான் அந்த படத்தின் முதல் நாளாகவே படமாக்கத் திட்டமிடப்பட்டு இருந்தது.

இதற்காக முன்னதாகவே இந்த காட்சியை படத்தில் அந்த நடிகையை ஒப்புதல் செய்வதற்கு முன்னதாகவே தெளிவாக கூறிவிட்டேன். மேலும், நீங்கள் அணிந்திருக்கும் பிரா எந்த டிசைனில் எப்படி இருக்க வேண்டுமோ அதை நீங்களே தேர்வு செய்து கொள்ளலாம், உங்கள் காஸ்ட்யூம் டிசைனர் வைத்தே அந்த உள்ளாடையை உருவாக்கி அணிந்து கொண்டு வரலாம் அதில் எனக்கு எந்தவித பிரச்சனையும் இல்லை என்று கூறிவிட்டேன்.
ஜாக்கெட்டை கழட்ட மறுத்த மாதுரி தீட்சித்: எல்லாத்துக்கும் சம்மதம் தெரிவித்து நடிகை மாதுரி தீட்சித் படத்தின் முதல் நாள் சூட்டிங்கின் போது தனது மேக்கப் ரூமில் இருந்து வெளியே வரவே இல்லை. சூட்டிங் ஆரம்பித்து 45 நிமிடங்கள் ஆகிவிட்டன. மாதுரி தீட்சித் வருகைக்காக மொத்த செட்டும் காத்துக்கொண்டிருந்தது. உதவியாளரை அனுப்பி என்ன பிரச்சனை என்று கேட்டு வர சொன்னேன். மாதுரி தீட்சித்திடம் பேசிவிட்டு வந்த உதவியாளர் இந்த காட்சியில் நடிக்க அவர் முடியாதென மறுத்து விட்டார் என்றார்.

அதன் பின்னர் நானே நேரடியாக சென்று மாதுரி தீட்சித்திடம் பேசினேன். இந்தக் காட்சியில் நடிக்க மட்டும் தனக்கு கஷ்டமாக இருக்கிறது வேண்டாம் என கூறினார். அப்படி என்றால் நீங்கள் பேக்கப் செய்து கொண்டு கிளம்பலாம் என்று கூறிவிட்டேன் என அமிதாப் பச்சன் சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த பெரிய சம்பவத்தை சமீபத்திய பேட்டி ஒன்றில் திருவாணன் கூறி பாலிவுட்டில் பரபரப்பை கிளப்பியுள்ளார்.
சேர்ந்து பணியாற்றவில்லை: சூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்த நடிகர் அமிதாபச்சன் பிரச்சனை என்ன என்பதை விசாரித்து இருவருக்கும் இடையே சமரசம் செய்து இன்னைக்கு அவருக்கு வேண்டாம் என்றால் அந்த காட்சியை மாற்றி விடலாமே எனக்கூறி அந்த படத்தில் மாதுரி தீட்சித்தை நடிக்க வைத்திருந்தார். ஆனால் அதன் பின்னர், திருவானை இயக்கத்தில் எந்த படத்திலும் நடிகை மாதுரி தீட்சித் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது


Click it and Unblock the Notifications











