Don't Miss!
- News கிருஷ்ணகிரியில் விழுந்த "அடி".. சரியான பதிலடி தந்த "வேங்கைவயல்".. ஒருத்தரும் ஓட்டுப்போட வரலயாமே
- Sports தீபக் சஹர் காயத்தின் நிலை என்ன? ஷர்துல் தாக்கூருக்கு மீண்டும் வாய்ப்பா? சிஎஸ்கே பயிற்சியாளர் பதில்!
- Lifestyle ஃபேஸ்க்கு என்ன பண்ணாலும் பலன் இல்லையா..? நீங்கள் செய்யும் தவறு இதுதான்...
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- Finance ஓரே நாளில் 4.2 கோடி சம்பாதித்த நாராயணமூர்த்தி-யின் 5 மாத பேரன்.. எப்படி..?
- Technology இப்படியொரு புரொஜெக்டர் யாரும் பார்த்ததில்லை.. 32GB மெமரி.. 1080P ரெசல்யூஷன்.. எந்த மாடல்? என்ன விலை?
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
தொடர்ந்து சிக்கும் பாலிவுட் நடிகைகள்.. பண மோசடி வழக்கில் இன்னொரு பிரபல நடிகையும் மாட்டிக்கிட்டாரு!
மும்பை: ஒரு பக்கம் போதைப் பொருள் விவகாரம் இன்னொரு பக்கம் பணமோசடி விவகாரம் என தொடர்ந்து பல பாலிவுட் பிரபலங்கள் போலீஸ் விசாரணைக்கு ஆஜராகி வருகின்றனர்.
பாலிவுட் சினிமா பிரபலங்கள் தொடர்ந்து குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டும் விசாரணைக்கு அழைக்கப்பட்டும் வருவது ரசிகர்கள் மத்தியில் பாலிவுட் குறித்த மிகவும் மோசமான மனநிலை உருவாக காரணமாகி உள்ளது.
அடுத்த படத்துக்கும் வேட்டு வைத்த இயக்குநர்.. தயாரிப்பாளருடன் சண்டை போட்டதால் தள்ளிப்போன ரிலீஸ்!
பண மோசடி புகார் தொடர்பான விசாரணைக்கு பிரபல பாலிவுட் நடிகை நோரா ஃபதேகி ஆஜராக அமலாக்கத் துறை அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது.
ஜாக்குலினிடம் விசாரணை
பிரபல பாலிவுட் நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸிடம் அமலாக்கத்துறையினர் 200 கோடி ரூபாய் மோசடி விவகாரத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் சுமார் 4 மணி நேரம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இந்நிலையில், ஜாக்குலினை தொடர்ந்து இன்னொரு பிரபல பாலிவுட் நடிகையும் இதே விவகாரத்தில் சிக்கி உள்ளார்.
மோசடி மன்னன்
பண மோசடி விவகாரம் மற்றும் குற்ற வழக்குகளில் 17 வயதில் இருந்தே மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் ஈடுபட்டு வருவதாகவும், சென்னையில் அவருக்கு சொந்தமான கடற்கரை பங்களா, 10க்கும் மேற்பட்ட சொகுசு கார்கள் மற்றும் 82 லட்சம் ரூபாய் ரொக்கம் உள்ளிட்டவை கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி நடைபெற்ற அதிரடி சோதனையின் போது கைப்பற்றப்பட்டது. சுகேஷ் சந்திராவுடன் தொடர்பில் இருந்த பாலிவுட் நடிகைகளிடமும் போலீசார் விசாரணையை முடுக்கி வருகின்றனர்.
நோரா ஃபதேஹி
பிரபல பாலிவுட் நடிகையான நோரா ஃபதேஹி இந்த விவகாரத்தில் தற்போது சிக்கி உள்ளார். ஜாக்குலின் ஃபெர்னாண்டஸை தொடர்ந்து நோராவிடம் அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்த அவருக்கு அதிரடியாக சம்மன் அனுப்பி உள்ளது பாலிவுட்டில் மிகப்பெரிய பரபரப்பை கிளப்பி உள்ளது.
கிளாமர் குயின்
சத்யமேவ ஜயதே படத்தில் இடம்பெற்ற தில்பார் ஐட்டம் பாடல் மூலம் பிரபலமானவர் நோரா ஃபதேஹி. ராக்கி ஹேண்ட்ஸம், ஸ்ட்ரீட் டான்ஸர் 3டி, ஸ்த்ரீ, மர்ஜவான் உள்ளிட்ட படங்களில் கவர்ச்சி நடனமாடி பாலிவுட்டின் கிளாமர் குயினாக கலக்கி வருபவர் நோரா ஃபதேஹி.
பிக் பாஸ் போட்டியாளர்
இந்தியில் நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 9ல் போட்டியாளராக கலந்து கொண்ட நோரா ஃபதேஹி ஏகப்பட்ட ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். தொடர்ந்து பாலிவுட் நடிகைகள் மற்றும் நடிகர்கள் குற்ற வழக்குகளில் கைதாவதும் விசாரிக்கப்படுவதும் ரசிகர்கள் மத்தியில் பாலிவுட் மீதே மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.