பாலிவுட் மெகா ஸ்டார்களுடன் கைகோர்க்கும் பிரபாஸ்...பிரம்மாண்டமாக தயாராகும் அதிரடி
மும்பை : இந்திய சினிமாவில் அடுத்தடுத்து பல மெகா பட்ஜெட் படங்கள் தயாராக உள்ளன. மற்ற மொழிகளை சேர்ந்த மெகா ஸ்டார்களை நடிக்க வைத்து பெரிய அளவில் படங்கள் தயாராகி வருகின்றன.
அந்த வரிசையில் தெலுங்கு டைரக்டர் நாக் அஸ்வின், இந்தியாவின் மெகா ஸ்டார்களான பிரபாஸ், தீபிகா படுகோனே, அமிதாப் பச்சன் ஆகியோரை வைத்து மெகா பட்ஜெட் படம் ஒன்றை இயக்க உள்ளார். கடந்த வருடமே அறிவிக்கப்பட்ட இந்த படம் கொரோனாவால் தள்ளி போனது.

படத்திற்கான ப்ரீ புரொடெக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன. படத்தின் கதைக்கு இறுதி வடிவம் கொடுத்து வருவதாக டைரக்டர் தெரிவித்துள்ளார். அதற்கு பிறகு 3 மெகா ஸ்டார்களையும் தனித்தனியாக சந்தித்து பேச உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜூன் அல்லது ஜூலையில் படத்தின் சூட்டிங்கை துவக்க தயாராகி வருவதாக அஸ்வின் தெரிவித்துள்ளார். 2022 ல் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். இதுவரை பெயரிடப்படாத இப்படம் அறிவியல் சார்ந்த த்ரில்லர் படமாக இருக்கும் என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











