Don't Miss!
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Automobiles டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
பாலிவுட் மெகா ஸ்டார்களுடன் கைகோர்க்கும் பிரபாஸ்...பிரம்மாண்டமாக தயாராகும் அதிரடி
மும்பை : இந்திய சினிமாவில் அடுத்தடுத்து பல மெகா பட்ஜெட் படங்கள் தயாராக உள்ளன. மற்ற மொழிகளை சேர்ந்த மெகா ஸ்டார்களை நடிக்க வைத்து பெரிய அளவில் படங்கள் தயாராகி வருகின்றன.
அந்த வரிசையில் தெலுங்கு டைரக்டர் நாக் அஸ்வின், இந்தியாவின் மெகா ஸ்டார்களான பிரபாஸ், தீபிகா படுகோனே, அமிதாப் பச்சன் ஆகியோரை வைத்து மெகா பட்ஜெட் படம் ஒன்றை இயக்க உள்ளார். கடந்த வருடமே அறிவிக்கப்பட்ட இந்த படம் கொரோனாவால் தள்ளி போனது.
படத்திற்கான ப்ரீ புரொடெக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன. படத்தின் கதைக்கு இறுதி வடிவம் கொடுத்து வருவதாக டைரக்டர் தெரிவித்துள்ளார். அதற்கு பிறகு 3 மெகா ஸ்டார்களையும் தனித்தனியாக சந்தித்து பேச உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜூன் அல்லது ஜூலையில் படத்தின் சூட்டிங்கை துவக்க தயாராகி வருவதாக அஸ்வின் தெரிவித்துள்ளார். 2022 ல் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். இதுவரை பெயரிடப்படாத இப்படம் அறிவியல் சார்ந்த த்ரில்லர் படமாக இருக்கும் என கூறப்படுகிறது.