Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
“திருமணம் விளையாட்டு அல்ல“… கணவரை பிரிந்த… பாலிவுட் நடிகை கண்ணீர் பேட்டி !
மும்பை : கணவரை விட்டு பிரிவதாக அறிவித்த பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த், திருமணம் என்பது விளையாட்டு அல்ல என கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
மாடல் அழகியான ராக்கி சாவந்த், பல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி உள்ளார்.
இந்தி,தெலுங்கு, கன்னடம், மராத்தி, தமிழ் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
ஐதராபாத் மிலிட்ரி ஓட்டலில் சாப்பிட்ட தனுஷ்...கூட இருக்க பொண்ணு யாரு...தீயாய் பரவும் போட்டோ
ராக்கி சாவந்த்
சால்மான் கான் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 1 மற்றும் சீசன் 14 மற்றும் சமீபத்தில் முடிந்த சீசன் 15 நிகழ்ச்சியிலும் ராக்கி சாவந்த் கலந்து கொண்டுள்ளார். ஆனால், ஒரு முறை கூட வெற்றி பெற்றதில்லை. கடந்த ஆண்டு ரித்தேஷ் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டதாவும் தனக்கு அற்புதமான கணவர் கிடைத்து இருப்பதாகவும் கூறியிருந்தார்.
பிக் பாஸ் நிகழ்ச்சி
பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் ரித்தேஷ்ஷை அனைவருக்கும் அறிமுகம் செய்து வைத்தார். இதையடுத்து, ரிதேஷ், ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பதுடன், அவர் மீது அவரது முதல் மனைவி பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தியிருந்தார் என்பதும் ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டது.
பிரிந்து அறிவிப்பு
இதையடுத்து, காதலர் தினத்தன்று தனது கணவரை விட்டு பிரிந்து விட்டதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இப்படி ஒரு நாளில் இந்த முடிவெடுத்ததில், நான் வருந்துகிறேன். மனம் உடைந்துவிட்டது என கூறியிருந்தார். அவரின் அந்த பதிவு இணையத்தில் பேசு பொருளானது.
சட்டப்பூர்வமான திருமணம் அல்ல
இந்நிலையில், கணவரை பிரிந்தது குறித்து பேட்டி அளித்துள்ள ராக்கி சாவந்த், பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்ததும் நாங்கள் எங்கள் வாழ்க்கையை அழகாக தொடங்கினோம். திடீரென அவர், மனைவிடமிருந்து விவகாரத்து கிடைக்கவில்லை, இதனால் சட்டசிக்கல் வந்துவிடும் என கூறிவிட்டு, அவரது உடமைகளை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டார்.
திருமணம் விளையாட்டு அல்ல
நான் செய்து கொண்ட திருமணம் சட்டப்பூர்வமானது இல்லை என்பதால், பிரிவு முடிவை எடுத்ததாகவும், அவருக்காக எப்போதும் காத்திருப்பேன். மனைவி குழந்தைகளோடு வாழ நினைத்தாலும் அவர் நன்றாக வாழட்டும் என்றார். ஆனால், திருமணம் என்பது விளையாட்டு அல்ல என கண்ணீர் மல்க கூறினார் ராக்கி சாவத்.