Don't Miss!
- News வெள்ளிக்கிழமை இதை மட்டும் யாருக்கும் தராதீங்க.. எந்தெந்த பொருளை வெள்ளி கிழமை தானம் தரலாம் தெரியுமா?
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Finance வேலைக்கு சேர்ந்த 6 மாசத்திலேயே ரிசைன்.. அனல் பறக்கும் விவாதம்..!
- Automobiles சாதா கிளாஸ் டிக்கெட்டை வாங்கிட்டு முதல் வகுப்பில் பயணிக்கனுமா!! விமான பணி பெண் சொல்லும் மூன்று ரகசிய வழிகள்!
- Lifestyle Today Rasi Palan 26 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் வேலை மாற்றத்தைப் பற்றி யோசிக்காமல் இருப்பது நல்லது..
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
பண்ணை வீட்டுக்குள் நுழைந்த பாம்பு.. 3 முறை என்னை கடித்தது.. மனம் திறந்த சல்மான் கான்!
மும்பை: தன்னை பாம்பு கடித்தது குறித்து நடிகர் சல்மான் கான் மனம் திறந்து பேசியுள்ளார்.
பாலிவுட் சினிமாவின் தாதா என்ற அழைக்கப்படுபவர் நடிகர் சல்மான் கான். நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார்.
வெளியேறும் முன் அக்ஷரா சொன்ன விஷயம்… எமோஷனல் ஆன ராஜூ!
ஏராளமான வெற்றிப் படங்களை கொடுத்துள்ள நடிகர் சல்மான் கான், பாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராகவும் உள்ளார்.
பாம்பு கடித்தது
இந்நிலையில் நடிகர் சல்மான் கான் இன்று தனது 56-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதற்காக அவர் பன்வெல்லில் உள்ள பண்ணை வீட்டிற்கு நேற்று முன்தினம் சென்றிருந்தார். அப்போது பண்ணை வீட்டுக்குள் நுழைந்த விஷ பாம்பு ஒன்று அவரை கடித்தது.
விஷ முறிவு மருந்தளித்து சிகிச்சை
இதையடுத்து அவர் கமோதில் உள்ள எம்.ஜி.எம் மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்து செல்லப்பட்டார். சல்மான் கானை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு விஷத்தை முறிக்கும் மருந்து கொடுத்து தீவிர சிகிச்சை அளித்தனர். இதனை தொடர்ந்து சில மணி நேரங்களுக்கு பிறகு நடிகர் சல்மான் கான் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
பாலிவுட்டில் பெரும் பரபரப்பு
சல்மான் கானை பாம்பு கடித்த தகவலை அறிந்த அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பிறந்த நாளுக்கு முந்தைய நாள் சல்மான் கானை பாம்பு கடித்த சம்பவம் பாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தன்னை பாம்பு கடித்தது குறித்து நடிகர் சல்மான் கான் மனம் திறந்து பேசியுள்ளார்.
3 முறை கடித்தது..
அவர் கூறியிருப்பதாவது, ஒரு பாம்பு என் பண்ணை வீட்டில் நுழைந்தது, நான் அதை ஒரு குச்சியைப் பயன்படுத்தி வெளியே எடுத்தேன். அது என்னை மூன்று முறை கடித்தது. அது ஒரு வகையான விஷப்பாம்பு. 6 மணி நேரம் மருத்துவமனையில் இருந்தேன்; இப்போது நலமாக இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
சல்மான் கான் பிறந்தநாள்
சல்மான் கான் பாம்பு கடியின் பாதிப்பிலிருந்து மீண்டு குணமடைந்து வந்ததை கேட்ட அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனிடையே இன்று பிறந்தநாளை கொண்டாடி வரும் சல்மான் கானுக்கு ரசிகர்களும் பாலிவுட் சினிமா நட்சத்திரங்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.