Don't Miss!
- News "பாம் வச்சிருக்கோம்! சீக்கிரம் வெடிக்க போகுது!" சென்னை வி.ஆர்.மாலுக்கு வெடிகுண்டு மிரட்டல்!
- Lifestyle உங்கள் கால் நகங்களை அழகாக மாற்ற அற்புதமான டிப்ஸ்..
- Finance இனி பீட்சா முதல் பெப்சி வரை இவர்கள் கையில் தான்..!! வாரிசு கைக்கு மாறும் ஆர் ஜே கார்ப்பரேஷன்..!
- Technology கம்ப்யூட்டர் Keyboard: F மற்றும் J கீயில் மட்டும் கோடு இருப்பது ஏன்? இது தெரியாம டைப் செஞ்சா கேலி செய்வாங்க..
- Automobiles இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
சட்னி செய்ய போய் சட்டுன்னு இப்படியாயிடுச்சே.. பிரபல நடிகை காயம், எலும்பு முறிவு..திடீர் ஆபரேஷன்!
மும்பை: சட்னி செய்து கொண்டிருந்த பிரபல நடிகைக்கு ஏற்பட்ட காயம் காரணமாக, எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
ஆமிர்கான் நடித்து சூப்பர் ஹிட்டான படம், தங்கல். இந்தப் படம் தமிழிலும் வெளியானது. இதில் சாக்ஷி தன்வார், பாத்திமா சனா சேக், ஸாய்ரா வாசிம் ஆகியோருடன் நடித்திருந்தவர் சான்யா மல்ஹோத்ரா.
நிதேஷ் திவாரி இயக்கி இருந்த இந்தப் படத்தை அடுத்து விஷால் பரத்வாஜின் படாக்கா, பதாய் ஹோ உட்பட சில படங்களில் நடித்துள்ளார்.
எங்களை ஏன் காதலில் விழ வைக்கிறீங்க..? த்ரோபேக் போட்டோ பதிவிட்ட நடிகையிடம் கேட்கும் ரசிகர்கள்!
சகுந்தலாதேவி
இப்போது அனுராக் பாஸுவின் லுடோ, வித்யா பாலனுடன் சகுந்தலாதேவி ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்தப் படங்கள் லாக்டவுனுக்கு பிறகு ரிலீஸ் ஆகும் என்று தெரிகிறது. லாக்டவுன் காரணமாக நடிகர், நடிகைகள் தங்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்கின்றனர். இதனால் சமையல், எக்சர்சைஸ், நடனம் என தங்களது நேரத்தைச் செலவழித்து வருகின்றனர்.
எதிர்பாராமல் சிக்கியது
இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாததால், நடிகை சான்யா, சாப்பிடுவதற்கு சட்னி செய்யும் முயற்சியில் இருந்தார். அப்போது வேகமாகச் சுற்றிக் கொண்டிருந்த ஜாரில் அவர் கை விரல் எதிர்பாராமல் சிக்கியது. இதில் அவர் கையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. அதிகமாக ரத்தம் வெளியானதால், அவர் மயக்க நிலைக்குச் சென்றார்.
மருத்துவமனை
வீட்டில் யாரும் இல்லாததால் உடனடியாக நண்பருக்கு போன் செய்தார். அவர் விரைந்து வந்து துணியால் விரல்களைக் கட்டிவிட்டு, தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு கோவிட் 19 சோதனைக்குப் பிறகு, அனுமதிக்கப்பட்டார். பரிசோதித்த டாக்டர்கள் இரண்டு விரல்களில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதையும் மேலும் சில விரல்களில் காயம் இருப்பதையும் கண்டனர்.
அறுவை சிகிச்சை
இதையடுத்து அவருக்கு கைவிரல்களில் உடனடியாக ஆபரேஷன் செய்யப்பட்டது. இப்போது காயம் காரணமாக, டெல்லியில் இருக்கும் தனது பெற்றோருடன் வசிக்க அவர் முடிவு செய்துள்ளார். இந்த காயம் சில நாட்களுக்கு முன் ஏற்பட்டுள்ளது. இதுபற்றி சமூக வலைத்தளத்தில் அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து நடிகைகள் யாமி கவுதம் உட்பட பலர் அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று கூறியுள்ளனர்.