Don't Miss!
- Finance மோனாலிசா ஓவியத்தை பாட வைத்த மைக்ரோசாப்ட் ஏஐ vasa -1.. அசரவைக்கும் வீடியோ..!
- News பாஜகவிற்கு தோல்வி பயம் வந்துவிட்டது.. மோடி எடுத்த இறுதி அஸ்திரம்.. புட்டு புட்டு வச்சிட்டாரே.. போச்சு
- Sports முத்துப்பாண்டிய அவன் கோட்டைலயே அடிச்சிட்டாங்க.. சிஎஸ்கேவை பொளக்கும் ரசிகர்கள்.. வெறித்தன மீம்ஸ்!
- Lifestyle ஒருடைம் உருளைக்கிழங்கு குருமாவை இந்த ஸ்டைலில் செய்யுங்க.. அப்புறம் பாருங்க இப்படிதான் எப்பவும் செய்வீங்க..
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Technology வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு உண்டு.. டிவி நடிகர் குறித்து மனைவி சொன்ன அதிர்ச்சி தகவல் !
மும்பை : எனது கணவருக்கு பல பெண்களுடன் தொடர்பு உண்டு என்று மனைவி சாரா கான் பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.
லாக் அப் என்ற புது நிகழ்ச்சி எம்எக்ஸ் பிளேயர் மற்றும் ஆல்ட் பாலாஜி ஆகிய ஓடிடி தளத்தில் பிப்ரவரி 27ந் தேதி முதல் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த நிகழ்ச்சியை பாலிவுட்டின் பிரபல நடிகை கங்கனா ரனாவத் தொகுத்து வழங்கி வருகிறார்.
லாக் அப்
பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் லாக் அப் என்ற ரியாலிட்டி ஷோவில், 12 வருடங்களுக்கு முன் பிரிந்த நடிகை சாரா கான் அவரது முன்னாள் கணவர் அலி மெர்சென்ட் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். இவர்கள் இருவரும் 2010ம் ஆண்டு நடந்த பிக் பாஸ் 4ல் கலந்து கொண்ட போது அந்த வீட்டிலேயே திருமணம் செய்து கொண்டனர்.
சாரா கான், அலி மெர்சென்ட்
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். தற்போது லாக் அப் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள சாரா, அலி மெர்சென்டிடமிருந்து பிரிந்ததற்கான காரணத்தை கூறினார். என் வாழ்க்கையில் நான் முதலில் காதலித்து அலியைத்தான். என்னை பல முறை அலி ஏமாற்றி உள்ளார் அவர் மீது இருந்த காதலால். அவரை மன்னித்து விட்டேன்.
பிக் பாஸ் வீட்டில் திருமணம்
பின்னர் நான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடி வந்தேன். அலி மெர்சென்ட் வைல்டு கார்டு மூலம் உள்ளே நுழைந்து நீ சரியாக விளையாடவில்லை என்றார். மேலும், அஷ்மீத்துடன் நீ பழகுவது வெளியில் தவறான புரிந்து கொள்ளப்படுகிறது. ஆகையால், நம்ம இந்த வீட்டிலேயே கல்யாணம் செய்து கொண்டால் எல்லாம் சரியாகிவிடும் என்றார், நானும் சம்பதித்தேன் பிக் பாஸ் வீட்டில் எங்கள் திருமணம் நடைபெற்றது.
பல பெண்களுடன் தொடர்பு
பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்பு, அலி என்னை ஏமாற்றத் தொடங்கினார். ஒன்றல்ல இரண்டல்ல பல பெண்களுடன் அவர் தொடர்ப்பு வைத்திருந்தார். மேலும், சாயிஷாவின் தோழி ஒருவருடனும் தொடர்பில் இருந்தார். தொடர்ந்து என்னை ஏமாற்றிக் கொண்டே இருந்தார். பல முறை எடுத்து சொல்லியும் அவர் திருந்தாததால், நான் அவரை விட்டு பிரிந்துவிட்டேன் என்று கண்ணீருடன் சாரா கான் கூறினார்.
தயவு செய்து பேசாதீர்கள்
தற்போது, லாக் அப் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு மூலம் அலி மென்சென்ட் உள்ளே வந்துள்ளதால் சாரா ஆத்திரத்தில் உள்ளார். மேலும், முன்னாள் கணவர் என்பதால் உங்கள் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. தயவு செய்து என்னுடன் நீங்கள் பேசாமல் இருந்தால் நன்றாக இருக்கும். மேலும் எனக்கு என்ன நடந்தது, உங்களுக்கு என்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்ள விருப்பம் இல்லை என்று தன்னிடம் பேச வந்த அலியிடம் நேரடியாகவே கூறிவிட்டார் சாரா கான்.