அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு உண்டு.. டிவி நடிகர் குறித்து மனைவி சொன்ன அதிர்ச்சி தகவல் !

மும்பை : எனது கணவருக்கு பல பெண்களுடன் தொடர்பு உண்டு என்று மனைவி சாரா கான் பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.
லாக் அப் என்ற புது நிகழ்ச்சி எம்எக்ஸ் பிளேயர் மற்றும் ஆல்ட் பாலாஜி ஆகிய ஓடிடி தளத்தில் பிப்ரவரி 27ந் தேதி முதல் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த நிகழ்ச்சியை பாலிவுட்டின் பிரபல நடிகை கங்கனா ரனாவத் தொகுத்து வழங்கி வருகிறார்.

லாக் அப்

லாக் அப்

பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் லாக் அப் என்ற ரியாலிட்டி ஷோவில், 12 வருடங்களுக்கு முன் பிரிந்த நடிகை சாரா கான் அவரது முன்னாள் கணவர் அலி மெர்சென்ட் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். இவர்கள் இருவரும் 2010ம் ஆண்டு நடந்த பிக் பாஸ் 4ல் கலந்து கொண்ட போது அந்த வீட்டிலேயே திருமணம் செய்து கொண்டனர்.

சாரா கான், அலி மெர்சென்ட்

சாரா கான், அலி மெர்சென்ட்

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். தற்போது லாக் அப் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள சாரா, அலி மெர்சென்டிடமிருந்து பிரிந்ததற்கான காரணத்தை கூறினார். என் வாழ்க்கையில் நான் முதலில் காதலித்து அலியைத்தான். என்னை பல முறை அலி ஏமாற்றி உள்ளார் அவர் மீது இருந்த காதலால். அவரை மன்னித்து விட்டேன்.

பிக் பாஸ் வீட்டில் திருமணம்

பிக் பாஸ் வீட்டில் திருமணம்

பின்னர் நான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடி வந்தேன். அலி மெர்சென்ட் வைல்டு கார்டு மூலம் உள்ளே நுழைந்து நீ சரியாக விளையாடவில்லை என்றார். மேலும், அஷ்மீத்துடன் நீ பழகுவது வெளியில் தவறான புரிந்து கொள்ளப்படுகிறது. ஆகையால், நம்ம இந்த வீட்டிலேயே கல்யாணம் செய்து கொண்டால் எல்லாம் சரியாகிவிடும் என்றார், நானும் சம்பதித்தேன் பிக் பாஸ் வீட்டில் எங்கள் திருமணம் நடைபெற்றது.

பல பெண்களுடன் தொடர்பு

பல பெண்களுடன் தொடர்பு

பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்பு, அலி என்னை ஏமாற்றத் தொடங்கினார். ஒன்றல்ல இரண்டல்ல பல பெண்களுடன் அவர் தொடர்ப்பு வைத்திருந்தார். மேலும், சாயிஷாவின் தோழி ஒருவருடனும் தொடர்பில் இருந்தார். தொடர்ந்து என்னை ஏமாற்றிக் கொண்டே இருந்தார். பல முறை எடுத்து சொல்லியும் அவர் திருந்தாததால், நான் அவரை விட்டு பிரிந்துவிட்டேன் என்று கண்ணீருடன் சாரா கான் கூறினார்.

தயவு செய்து பேசாதீர்கள்

தயவு செய்து பேசாதீர்கள்

தற்போது, லாக் அப் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு மூலம் அலி மென்சென்ட் உள்ளே வந்துள்ளதால் சாரா ஆத்திரத்தில் உள்ளார். மேலும், முன்னாள் கணவர் என்பதால் உங்கள் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. தயவு செய்து என்னுடன் நீங்கள் பேசாமல் இருந்தால் நன்றாக இருக்கும். மேலும் எனக்கு என்ன நடந்தது, உங்களுக்கு என்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்ள விருப்பம் இல்லை என்று தன்னிடம் பேச வந்த அலியிடம் நேரடியாகவே கூறிவிட்டார் சாரா கான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X