Don't Miss!
- News மாமியாரை ஒரே எத்து.. அலேக்கா "தூக்கி" குப்பை தொட்டியில் போட்டாச்சு.. அந்த மகராசியின் பெயர் "லட்சுமி"
- Finance தங்கம் விலை ஓரே நாளில் 1400 ரூபாய் உயர்வு.. முதல் முறையாக ரூ.51000 தொட என்ன காரணம்..?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Automobiles பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
ஷாருக்கான்.. அடுத்து சல்மான் கான்.. பாலிவுட்டில் செட்டிலாகும் நயன்தாரா ?
சென்னை : தமிழ் சினிமாவில் இன்றைய தேதியில் நயன்தாரா தான் நம்பர் 1 நடிகையாக இருந்து வருகிறார்.
சாதாரண நடிகையாக சினிமாவில் அறிமுகமாகி பிறகு கவர்ச்சிக் கன்னியாக சில ஆண்டுகள் வலம் வந்த நயன்தாரா ஒரு கட்டத்தில் சோலோவாக நடிக்க ஆரம்பித்து இப்போது லேடி சூப்பர் ஸ்டார் என்ற உயரத்துக்கு சென்று விட்டார்.
விஜய், ரஜினி என அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்து பெரிய நடிகையாக மாறிவிட்ட நயன்தாரா இப்போது பாலிவுட்டில் தனது தடத்தை பாதித்துள்ளார்.
நடிகை மும்தாஜ் வீட்டில் கொடுமை தாங்கல.. 100க்கு போன் போட்ட பணிப்பெண்.. என்ன நடந்தது?
நயன்தாரா
இயக்குநர் விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். நானும் ரவுடிதான் திரைப்படத்தில் நடித்தபோது இருவரும் காதலிக்க தொடங்கினர். இருவரும் இணைந்து வாழ்ந்து வந்த நிலையில், இவர்கள் திருமணம் குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.
திருப்பதியில் திருமணம்
நயன்தாரா தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில், தனக்கும் விக்னேஷ் சிவனுக்கும் நிச்சயதார்த்தம் குடும்பத்தார் முன்னிலையில் எளிமையாக நடந்ததாகவும், திருமணம் குறித்து அனைவருக்கும் வெளிப்படையாக அறிவிப்போம் எனவும் தெரிவித்திருந்தார்.
திருமணம்
நடிகை நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் ஜூன் 9-ம் தேதி திருப்பதியில் திருமணம் செய்து கொள்ளப்போவதாக இணையத்தில் தகவல்கள் பரவி வருக்கின்றன. ஆனால், நயன்தாரா, விக்னேஷ் சிவன் தரப்பிலிருந்து அவர்களின் திருமண தேதி குறித்த எந்தவிதமான அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
சல்மான்கானுடன்
அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் ஷாருக்கானின் படத்தில் நயன்தாரா நாயகியாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு திருமணம் செய்ய உள்ள நயன்தாரா, திருமணம் முடிந்தவுடன் சல்மானின் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவலை கேள்விபட்ட ரசிகர்கள் போகிற போக்கை பார்த்தா, நயன்தாரா பாலிவுட்டில் செட்டிலாகி விடுவார் போல என்று கேட்டு வருகின்றனர்.