Don't Miss!
- Automobiles இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
நிழல் உலக தாதாக்களை வைத்து மிரட்டல்… ஷில்பா,அவரது கணவர் மீது ஷெர்லின் சோப்ரா புகார் !
மும்பை : ஷில்பா ஷெட்டி, ராஜ் குந்த்ரா ஆகியோர் நிழல் உலக தாதாக்களை வைத்து கொலை மிரட்டல் விடுத்ததாக பாலிவுட் நடிகை ஷெர்லின் சோப்ரா குற்றம்சாட்டியுள்ளார்.
இதனால் தான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் இதற்கு ஈடு தொகையாக 75 கோடி கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
அண்ணாச்சியை விடாத இசைவாணி.. நீ ரொம்பவே மாறிட்ட என குற்றச்சாட்டுகளை அடுக்கும் ஹவுஸ்மேட்ஸ்!
இந்த கொலை மிரட்டலை கண்டுதான் பயப்படபோவதில்லை என்றும் ஷெர்லின் சோப்ரா கூறியுள்ளார்.
ராஜ்குந்தரா கைது
ஆபாசப் படங்கள் தயாரித்து செல்போன் செயலியில் பதிவேற்றிய புகாரில், நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து பாலிவுட் நடிகை ஷெர்லின் சோப்ராவும், அவருடன் பணியாற்றியது தனக்கு மோசமான அனுபவம் என்று ராஜ்குந்த்ரா மீது புகார் கூறியிருந்தார்.
மீண்டும் புகார்
ராஜ்குந்த்ரா மீது வழக்கறிஞர் புகார் கொடுக்குமாறு கூறியதால் தான், நான் வழக்கு தொடர்ந்ததாக கூறி, வழக்கை வாபஸ் பெற்றார் ஷெர்லின் சோப்ரா. இதையடுத்து, அக்டோபர் 14 அன்று ஜுஹு போலீஸ் நிலையத்தில் ராஜ் குந்த்ரா மற்றும் ஷில்பா ஷெட்டி மீது மீண்டும் புகார் அளித்தார்.
ரூ. 50 கோடி நஷ்ட ஈடு
ராஜ் குந்த்ரா மற்றும் ஷில்பா ஷெட்டி வழக்கறிஞர் பாட்டீல், தம்பதியினர் மீது சுமத்திய குற்றச்சாட்டுகள், எந்த ஆதாரமும் இல்லை என்றும், பணம் பறிக்கும் நோக்கத்துடன் ஷெர்லின் சோப்ரா செயல்படுவதாக கூறி,' ஷெர்லின் சோப்ராவுக்கு எதிராக ரூ. 50 கோடி கேட்டு மான நஷ்ட நோட்டீஸ் அனுப்பி இருந்தனர்.
ஷெர்லின் சோப்ரா பதில்
பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவரும் தொழிலதிபருமான ராஜ் குந்த்ரா ஆகியோர் தனக்கு எதிராக ரூ.50 கோடி கேட்டு அவதூறு வழக்கு தொடர்ந்ததற்கு நடிகையும் மாடலுமான ஷெர்லின் சோப்ரா பதிலளித்துள்ளார்.
கொலை மிரட்டல்
ராஜ் குந்த்ராவும் ஷில்பா ஷெட்டியும் நிழல் உலக தாதாக்களை வைத்து மிரட்டி எனக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். இந்த கொலை மிரட்டலுக்கு எல்லாம் நான் பயப்பட மாட்டேன். எனது புகாரை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும்படியும், எனது வாக்குமூலத்தைப் பதிவு செய்யுமாறு காவல்துறையை நான் கேட்டுக்கொள்கிறேன்.
ரூ.75 கோடி நஷ்ட ஈடு
மேலும் என்னை மன அழுத்தத்திற்கு உள்ளாக்கியதற்காவும், பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியதற்காகவும் 75 கோடி ரூபாய் கேட்டு பதில் நோட்டீஸ் அனுப்பியுள்ளேன் என்று ஷெர்லின் சோப்ரா கூறுகிறார். ஷெர்லின் சோப்ரா ஜூஹூ காவல் நிலையத்தில் இந்த புகார் மனுவை அனுப்பியுள்ளார்.