Don't Miss!
- Finance AC வாங்கப் போறிங்களா? இந்த தவறை பண்ணிடாதீங்க.. முதல்ல இதை நோட் பண்ணுங்க!
- News சென்னைக்கு வரப்போகும் புல்லட் ரயிலை விடுங்க.. அதைவிட சிறப்பான சூப்பர் சம்பவம் இருக்கு.. இதை பாருங்க
- Sports இதுதான் கிரிக்கெட்.. அஷுதோஷ் சர்மாவிடம் கற்றுக் கொள்ள ஆவலாக உள்ளேன்.. சூர்யகுமாரே சொல்லிட்டாரு!
- Lifestyle இந்தியாவில் இன்றும் ராஜவாழ்க்கை வாழும் அரச குடும்பங்கள்..இவங்களுக்கு எங்க இருந்து இவ்வளவு பணம் வருது தெரியுமா?
- Technology புது ரூல்ஸ்.. தேர்தல் முடிந்ததும் அமல்.. இனி 24 மணி நேரம் தான்.. ரயில் டிக்கெட் சேவையில் 2 பெரிய மாற்றங்கள்!
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஷில்பா ஷெட்டி, ராஜ் குந்த்ரா… நடிகை ஷெர்லின் சோப்ரா மீது ரூ .50 கோடி கேட்டு மான நஷ்ட வழக்கு !
மும்பை : நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் ராஜ்குந்த்ரா ஆகியோர் நடிகை ஷெர்லின் சோப்ராவுக்கு எதிராக ரூ.50 கோடி கேட்டு மான நஷ்ட நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
ராஜ் குந்த்ரா மற்றும் ஷில்பா ஷெட்டி மீது பாலியல் துன்புறுத்தல் வழக்கு பதிவு செய்திருந்தார் நடிகை ஷெர்லின் சோப்ரா.
கடந்த வாரம், மும்பை ஜுஹு போலீசில், அந்த ஜோடி தன்னை பாலியல் மற்றும் மனரீதியாக துன்புறுத்தியதாகவும், பண மோசடி செய்ததாகவும் குற்றம்சாட்டி புகார் அளித்திருந்தார்.
மான நஷ்ட வழக்கு
ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ரா ஆகியோர் நடிகர் ஷெர்லின் சோப்ரா மீது அவதூறு வழக்கு பதிவு செய்துள்ளனர். தம்பதியினரின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரசாந்த் பி பாட்டீல் ரூ .50 கோடி கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், நடிகை ஷெர்லின் சோப்ரா, ராஜ் குந்த்ரா மற்றும் அவரது மனைவி ஷில்பா ஷெட்டி மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்கு, எவ்வித ஆதாரமும் இல்லை, பணம் பறிக்கும் நோக்கத்துடன் ஷெர்லின் சோப்ரா இந்த வழக்கை தொடுத்திருப்பதாக ராஜ்குந்த்ராவின் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
மீண்டும் வழக்கு
ஷெர்லின் சோப்ரா கடந்த ஏப்ரல் மாதம் ராஜ்குந்தரா மீது புகார் அளித்திருந்தார். இதையடுத்து அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, ஷெர்லின் சோப்ரா, தானாக முன்வந்து தனது புகார் போலியானது என்றும், அவரது வழக்கறிஞர் தான் ராஜ் குந்த்ராவுக்கு எதிராக ஒரு புகாரைத் தொடங்க பரிந்துரைத்தார் என்றும், ராஜ் குந்த்ரா மீது கிரிமினல் புகார் கொடுத்ததற்காக வெட்கப்படுவதாகவும், நிபந்தனையின்றி புகாரை வாபஸ் பெறுவதாக கூறி வழக்கை வாபஸ் பெற்றதை வழக்கறிஞர் பாட்டீல் அந்த நோட்டீசில் சுட்டிகாட்டியுள்ளார். இதையடுத்து, வழக்கறிஞர் மூலம் மீண்டும் வழக்குப்பதிவு செய்துள்ளது பணம் பறிக்கும் நோக்கத்துடன் தான் என்று வழக்கறிஞர் பாட்டீல் கூறியுள்ளார்.
ரூ 50 கோடி நஷ்ட ஈடு
இந்நிலையில் ஷில்பா ஷெட்டி மற்றும் ராஜ்குந்தரா ஆகியோர் நடிகை ஷெர்லின் சோப்ராவுக்கு எதிராக ரூ 50 கோடி கேட்டு மான நஷ்டு வழக்கு தொடர்ந்துள்ளனர். அதில், நற்பெயர் இழப்பு, வியாபார இழப்பு மற்றும் உடல் மற்றும் மன வேதனை ஆகியவற்றுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அதில் கோரியுள்ளனர்.
பகிரங்க மன்னிப்பு
செய்தித்தாள்கள் மற்றும் டிஜிட்டல் ஊடக தளங்களில் பகிரங்க மன்னிப்பை வெளியிட வேண்டும் என்றும், இதை செய்ய தவறினால், சோப்ராவுக்கு எதிராக சிவில் மற்றும் கிரிமினல் நடவடிக்கைகளை எடுப்படும் என்றும் வழக்கறிஞர் பாட்டீல் அந்த நோட்டீசில் குறிப்பிட்டுள்ளார்.
-
யுவன் ஷங்கர் ராஜா எடுத்த அதிரடி முடிவு.. ரசிகர்கள் ஷாக்.. அனைத்துக்கும் காரணம் GOAT பாடல்?
-
புஷ்பா 2 ஓடிடி உரிமம் இத்தனை கோடிக்கு விற்பனையா?.. பல டாப் நடிகர்கள் லைஃப் டைம் வசூலே இவ்ளோ இல்லையே!
-
Baakiyalakshmi: வீட்டில் வாமிட் சத்தம் கேக்கனும்.. எழிலிடம் மல்லுகட்டிய ஈஸ்வரி.. இதுலதான் ட்விஸ்ட்!