பிரபல நடிகையுடன் காதல் என பரவும் தகவல்... மவுனம் கலைத்த நடிகர்.. திருமணம் குறித்து பதில்!

மும்பை: பிரபல நடிகையுடன் காதல் என பரவும் தகவல் குறித்து பிரபல பாலிவுட் நடிகரான சித்தார்த் மல்கோத்ரா மவுனம் கலைத்துள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகரான சித்தார்த் மல்ஹோத்ராவும் நடிகை கியாரா அத்வானியும் அடிக்கடி காதல் வதந்திகளால் தலைப்பு செய்தியாகி வருகின்றனர்.

ஷெர்ஷா படத்தில் கியாரா அத்வானியும் சித்தார்த் மல்ஹோத்ராவும் இணைந்து நடித்தனர். இருவரின் கெமிஸ்ட்ரியும் ரசிக்கும்படியாக இருந்தது.

ஆஃப் ஸ்க்ரீன் காதல்

ஆஃப் ஸ்க்ரீன் காதல்

இதனை தொடர்ந்து அவர்கள் இருவருக்குள்ளும் காதல் என தகவல் பரவி வருகிறது, ஆனால் தங்களின் ஆஃப் ஸ்க்ரீன் காதல் குறித்து இருவருமே வாய் திறக்காமல் இருந்து வருகின்றனர். இந்நிலையில் ஊடகம் ஒன்றுக்கு சித்தார்த் மல்ஹோத்ரா சமீபத்தில் பேட்டி அளித்தார்.

நான் ஜோசியக்காரர் இல்லை

நான் ஜோசியக்காரர் இல்லை

அப்போது திருமணம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த சித்தார்த் மல்ஹோத்ரா, தான் ஒன்றும் ஜோசியக்காரர் இல்லை என்றும் திருமணம் எப்போது நடக்கும் என்று தனக்கு தெரியாது என்றும் கூறினார். மேலும் திருமணத்திற்கு என எந்த காலக்கெடுவும் இல்லை என்றும் அது சரியாக செய்யப்பட வேண்டும் என்றும் கூறினார்.

கியாரா அத்வானியுடன் ரிலேஷன்ஷிப்

கியாரா அத்வானியுடன் ரிலேஷன்ஷிப்

மேலும் கியாரா அத்வானியுடனான தனது பாண்ட் குறித்து பேசிய நடிகர் சித்தார்த், "நான் தனிப்பட்ட முறையில் அவருடன் வழக்கமான உணர்வு இருக்கிறது, நாங்கள் இருவரும் அதில் கனெக்ட் ஆகிறோம். நான் டெல்லியைச் சேர்ந்த ஒரு பையன், எனக்கு இந்தத் தொழிலுடன் தொடர்பு இல்லை, ஆனால் இப்போது பல ஆண்டுகளாக இங்கே இருக்கிறேன்.

வழக்கமான வாழ்க்கை இருக்கிறது

வழக்கமான வாழ்க்கை இருக்கிறது

அவரும் ஓரிரு வருடங்களாக வேலை செய்கிறார். நாங்கள் இருவருமே தொழிலிலிருந்து விலகி வாழ்ந்து கொண்டிருக்கிறோம், அதுவே எங்களை இணைக்கும் மற்றும் நாங்கள் போற்றும் ஒன்று. சில நேரங்களில் நீங்கள் இந்த எல்லா விஷயங்களிலும் சிக்கிக் கொள்வீர்கள், நீங்கள் ஒரு வழக்கமான வாழ்க்கை இருக்கு என்பதை மறந்துவிடுவீர்கள். எங்கள் இருவருக்கும் வழக்கமான வாழ்க்கை இருக்கிறது என்று நான் நினைக்கிறேன், அதனால்தான் நாங்கள் கனெக்ட் ஆகிறோம். இவ்வாறு சித்தார்த் மல்ஹோத்ரா கூறினார்.

நெருங்கிய நண்பர்களில் ஒருவர்

நெருங்கிய நண்பர்களில் ஒருவர்

இதேபோல் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த கியாரா அத்வானி, சித்தார்த் தனது நெருங்கிய நண்பர்களில் ஒருவர் என்று கூறினார். "ஒரு இணை நட்சத்திரமாக, சித்தார்த் மிகவும் கவனம் செலுத்துபவர். அவர் நிறைய வாசிப்புகளை செய்கிறார். நான் ஒரு படத்தில் வேலை செய்ய விரும்புவதைப் போலவே இருக்கிறது. எனவே, அந்த வகையில், நாங்கள் நன்றாகப் பழகினோம்.

வாழ்க்கை நிறைந்தவர்

வாழ்க்கை நிறைந்தவர்

ஒரு நண்பராக, அவர் தொழில்துறையில் எனது நெருங்கிய நண்பர்களில் ஒருவர் என்று நான் கூறுவேன். ஒரு நண்பராக இருந்தாலும், அவர் வாழ்க்கை நிறைந்தவர் மற்றும் எப்போதும் வேடிக்கையாக இருக்கிறார், இவ்வாறு கியாரா அத்வானி சித்தார்த் மல்ஹோத்ரா குறித்து தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X