ஆன்லைன் மோசடியில் சிக்கிய சன்னி லியோன்… இழந்த பணம் எவ்வளவு தெரியுமா ?
மும்பை : பாலிவுட் நடிகை சன்னி லியோனின் பான் கார்டை பயன்படுத்தி மர்ம நபர் ஒருவர் ஆன்லைனில் மோசடி செய்துள்ளார்.
Recommended Video
நடிகை சன்னி லியோன் தமிழ் , தெலுங்கு,இந்தி, கன்னடம், மலையாளம் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
ஒரு சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடித்து பிரபலமான நடியைக உள்ளார்.

சன்னி லியோன்
ஆபாச படங்கள் மூலம் பிரபலமாகிய சன்னி லியோன், தற்போது இளம் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்துகொண்டிருக்கிறார். அவர் ஒரு பாடலுக்காவது கவர்ச்சி குத்தாட்டம் போட வேண்டும் என படத்தயாரிப்பாளர்கள் தவம் இருக்கிறார். தமிழ் படங்களிலும் நடிக்க வைக்க, இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

தமிழ் படங்களில்
நடிகர் ஜெய் நடிப்பில் வெளியான வடகறி படத்திலும் அவருடன் சேர்ந்து ஐட்டம் பாடலுக்கு ஆட்டம் போட்டிருந்தார் சன்னி லியோன். மேலும் தமிழில் வீரமாதேவி என்னும் படத்தில் மாகாராணி வேடத்தில் கம்பீரமாக நடித்து ரசிகர்களிடயே பெரிய வரவேற்பை பெற்றார். தற்போது ஷீரோ என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் தம்பி ராமையா மற்றும் சதீஷ் இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.

மோசடி
பாலிவுட் நடிகை சன்னி லியோன், தனது ட்விட்டரில், சில முட்டாள்கள் என் பான் கார்டு எண்ணை பயன்படுத்தி ரூ.2000 கடன் பெற்றுள்ளனர். இதனால் எனது கிரெடிட் ஸ்கோர் பாதிக்கப்பட்டுள்ளது என பதிவிட்டு இருந்தார். அத்துடன், சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் இருந்து எனக்கு எந்த உதவியும் இதுவரை வரவில்லை என குறிப்பிட்டு இருந்தார்.

நன்றி
இது இணையத்தில் வைரலான நிலையில், இந்தியாபுல்ஸ் செக்யூரிட்டீஸ் லிமிடெட் மற்றும் இந்தியாபுல்ஸ் வீட்டுக் கடன்கள் தனது சிக்கலை உடனடியாகத் தீர்த்துவிட்டதாகக் கூறி மற்றொரு ட்வீட்டை பதிவிட்டு இருந்தார். மேலும், இந்த பிரச்சினையை விரைவாக சரி செய்ததற்கும், இனி நடக்காது என உறுதி அளித்ததற்கும் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











