Don't Miss!
- News எதிர் எதிர் துருவம்.. சர்ப்ரைஸ் மீட்டிங்.. நேருக்கு நேர் சந்தித்து அளவளாவிய தமிழிசை - பிரேமலதா!
- Sports தோனிக்கு இது தான் கடைசி சீசனா? ரெய்னா சொன்னதை கேளுங்க!
- Lifestyle சாணக்கிய நீதி படி ஒரு நல்ல குடும்ப தலைவரிடம் இந்த 6 குணங்கள் இருக்கணுமாம்...அப்பதான் குடும்பம் நல்லா இருக்கும்
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
காதலை விட மரியாதை முக்கியமானது… சுஷ்மிதா சென் சொன்ன லவ் மெசேஜ்!
மும்பை : காதலன் ரோஹ்மனை விட்டு பிரிந்த சுஷ்மிதா சென், காதலை விட மரியாதை முக்கியமானது என கூறியுள்ளார்.
Recommended Video
பிரபல பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென். தமிழில் நாகார்ஜுனா ஜோடியாக, ரட்சகன் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.
பிறகு ஷங்கர் இயக்கிய முதல்வன் படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார். 45 வயதான அவர், இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை.
பெரிய பட்ஜெட்டா இருக்கே... இதையா போனி கபூர் வேணாம்னு சொன்னாரு?
சுஷ்மிதா சென்
முன்னாள் உலக அழகியும் நடிகையுமான சுஷ்மிதா சென் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வருகிறார். ஆனால் இரண்டு பெண் குழந்தைகளை தத்து எடுத்து வளர்த்து வருகிறார். சுஷ்மிதாசென் கடந்த 2018ம் ஆண்டிலிருந்து ரோஹ்மன் என்பவரைக் காதலித்து வந்தார்.
பிரிந்தனர்
இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் செய்திகள் வெளியாகின. இருவரும் ஒரே வீட்டில் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வந்தனர். ஆனால் சமீப காலமாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் செய்தி வெளியானது. இதையடுத்து, நீண்ட நாள் உறவு முடிந்துவிட்டது என்றும், நண்பர்களாக தொடங்கினோம், நண்பர்களாகவே இருப்போம் எனஅறிவித்து இருந்தார்.
காதலை மதிக்கிறேன்
இந்நிலையில், சுஷ்மிதா சென் தனது இன்ஸ்டாகிராமில் நேரலையில் ரசிகர்களுடன் உரையாடினார். அதில், பேசிய சுஷ்மிதா, காதலை ஏன் மதிக்கிறார் என்பதை வெளிப்படுத்தினார். அப்போது ஒரு ரசிகர், மரியாதை என்றால் என்ன என்று கேட்டார். அதற்கு பதிலளித்த சுஷ்மிதா, மரியாதை என்பதைத்தான் நான் எல்லாமுமாக பார்க்கிறேன். ஏனென்றால் காதலை நீங்கள் மிகுந்த தீவிரத்துடன் உணர்கிறீர்கள், அதே தீவிரத்துடன் நீங்கள் வெளியேறுவீர்கள்.
மரியாதை காதலுக்கு முக்கியம்
சினிமாவும், ஊடகங்களும், புத்தகங்களும் உங்களை நம்பத்தகாத காதலைத்தான் காட்டுகிறது. அந்த காதலில் பொறுப்புகளும் இல்லை, சிக்கல்களும் இல்லை. ஆனால் மரியாதை இல்லாத இடத்தில், காதலுக்கு அர்த்தமில்லை. காதல் வந்து போகும், ஆனால் மரியாதை இருந்தால் மட்டுமே காதலை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்கும். காதலில் மட்டும் கவனம் செலுத்தினால் அது தற்காலிகமானதாக இருக்கும். மரியாதை இல்லை என்றால், காதலும் அங்கு இருக்காது என்று காதல் குறித்தும் மரியாதை குறித்து அந்த நேரலையில் சுஷ்மிதா அழகாக பேசினார்.
-
இதனால் தான் ஷங்கர் மகள் திருமணத்துக்கு தீபிகா படுகோன் வரலையா?.. திடீரென டிரெண்டாகும் புகைப்படம்!
-
மவனே யாருகிட்ட.. மேனேஜரை அலறவிட்ட கார்த்திக்..என்னாச்சு தெரியுமா? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
-
மறக்கமுடியுமா சின்னக் கலைவாணரை.. விவேக்கின் 3ம் ஆண்டு நினைவு தினம்.. செடிகளை நடும் செல் முருகன்!