Don't Miss!
- Automobiles சாதாரணமாவே இந்த மாருதி காரை வீட்டுக்கு மளிகை சாமான் வாங்குற மாதிரி வாங்கிட்டு இருக்காங்க.. இதுல இது வேறையா!
- Lifestyle Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
எப்போ வரணும்னு எனக்கு தெரியும்.. மரியாதையா பேசு.. பத்திரிகையாளர்களிடம் சண்டைக்கு சென்ற டாப்ஸி!
மும்பை: தனது டோபாரா படத்தையும் தடை செய்ய வேண்டும் என ஹாஷ்டேக் போடுங்களேன் என நெகட்டிவிட்டி பப்ளிசிட்டிக்கு கூட அலைய ஆரம்பித்து விட்ட நடிகை டாப்ஸி, அதற்காக பத்திரிகையாளர்களிடம் சண்டை போட்டு அந்த பப்ளிசிட்டியை தேடிக் கொண்டார்.
இயக்குநர் அனுராக் கஷ்யப் இயக்கத்தில் டாப்ஸி நடித்துள்ள டோபாரா திரைப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், அதற்கான புரமொஷனில் தீவிரம் காட்டி வருகிறார் நடிகை டாப்ஸி.
டாப்ஸி பத்திரிகையாளர்களிடம் தரக்குறைவாக நடந்து கொண்டதற்கு எதிராக கண்டனங்கள் கிளம்பி உள்ளன.
இந்த படம் இந்தியில் ரீமேட் செய்யப்படும்...கன்ஃபார்ம் செய்த எஸ்.ஜே.சூர்யா
டாப்ஸியின் அடுத்த படம்
ஆடுகளம், காஞ்சனா 2, கேம் ஓவர் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்த நடிகை டாப்ஸிக்கு பாலிவுட்டில் ஏகப்பட்ட படங்கள் குவிந்து வருகின்றன. பிங்க் படத்தின் மூலம் அவருக்கு பாராட்டுக்கள் கிடைத்த நிலையில், கங்கனாவை விட இவர் வசம் அதிக நல்ல படங்கள் குவிந்தன. ஆனால், சமீப காலமாக டாப்ஸி நடிப்பில் வெளியான படங்கள் எதுவுமே சரியாக ஓடவில்லை. இந்நிலையில், அவரது அடுத்த படம் டோபாரா வரும் ஆகஸ்ட் 19ம் தேதி வெளியாகிறது.
தாமதமாக வந்த டாப்ஸி
இந்நிலையில், மும்பையில் நடைபெற்ற புரமோஷன் நிகழ்ச்சிக்கு நடிகை டாப்ஸி தாமதமாக வந்ததாகவும், ஏன் லேட் என பத்திரிகையாளர் ஒருவர் அவரிடம் கேட்க பிரச்சனை வெடித்திருக்கிறது. எனக்கு சொன்ன டைமுக்கு நான் வந்திருக்கேன், என்னை எப்படி லேட்னு சொல்லலாம் என நடிகை டாப்ஸி அந்த பத்திரிகையாளரிடம் எகிறி உள்ளார்.
கையெடுத்து கும்பிட்டு
நான் கேமரா முன்னாடி நிற்கிறேன். நான் எது செஞ்சாலும் தப்பா தான் தெரியும். கொஞ்சம் நீங்களும் கேமரா முன்னாடி வந்து பேசினால், நீங்க எப்படி கேள்வி கேட்டீங்கன்னு புரியும். எப்போதுமே நடிகர்கள் தான் தவறு செய்வார்கள் என பொரிந்து தள்ளி விட்டார்.
இதுவும் புரமோஷனுக்கா
ஆலியா பட்டின் டார்லிங்ஸ், அமீர்கானின் லால் சிங் சத்தா உள்ளிட்ட படங்களை தடை செய்வதாக ஹாஷ்டேக்குகள் டிரெண்டாகி வரும் நிலையில், தங்களுடைய டோபாரா படத்தையும் தடை செய்ய பாலிவுட் ரசிகர்கள் டிரெண்ட் செய்தால் நெகட்டிவ் பப்ளிசிட்டியாவது கிடைக்கும் என சமீபத்தில் அனுராக் காஷ்யப் மற்றும் டாப்ஸி பேசிய நிலையில், பத்திரிகையாளர்களுடன் டாப்ஸி மல்லுக்கு சென்றதே புரமோஷன் யுக்தியாக இருக்குமா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.