Don't Miss!
- News கெஜ்ரிவாலை மரணத்தை நோக்கி தள்ளுகிறார்கள்! பாஜக மீது ஆம் ஆத்மி பாய்ச்சல்! அதிரும் தலைநகர் டெல்லி
- Finance ரூ.4,000 கோடிக்கு ஐபிஓ.. ரெடியான ஓலா நிறுவனம்..!
- Sports என்ன வீடியோ கேம் விளையாடுறாங்க.. 11 சிக்ஸ், 13 ஃபோர்ஸ்.. 5 ஓவர்களில் சதம்.. வரலாறு படைத்த ஐதராபாத்!
- Automobiles ஓலா ஷோரூம் இல்லாத ஊரே இல்ல போல!! இன்னும் சில வருஷத்தில் தெருவுக்கு ஒண்ணும் வந்துவிடும்!
- Lifestyle நீங்க போடுற டீ அமிர்தம் மாதிரி இருக்கணுமா? அப்ப டீ போடுறப்ப இந்த தவறுகளை தெரியாம கூட பண்ணிராதீங்க...!
- Technology கடையை இழுத்து மூடும் OnePlus.. இனி தமிழ்நாட்டில் ஒன்பிளஸ் போன் வாங்க முடியாதா? உண்மை என்ன?
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
கங்கனா ரனாவத் நடிகையாக இருக்கலாம்… ஆனால்… நீதிமன்றம் அதிரடி உத்தரவு !
மும்பை : கங்கனா ரனாவத் பிரபலம் என்பதை மேற்கோள் காட்டி, நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரிய விண்ணப்பத்தை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். பாலிவுட்டின் சர்ச்சை நாயகி என்று அழைக்கும் அளவுக்கு அவர் பெயர் எடுத்துள்ளார். 2020ம் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், பாலிவுட் பாடலாசிரியர் ஜாவேத் குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்ததாக கூறி ஜாவேத் கங்கனா மீது அவதூறு வழக்குப்பதிவு செய்திருந்தார்.
இதுதொடர்பான வழக்கு மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது. இதில்,கங்கனா ரனாவத், சினிமாவில் பிரபலமாக இருப்பதால் பணிச்சுமை அதிகமாக இருப்பதாகவும், இதனால், இந்த வழக்கில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்கக்கோரி நீதிமன்றத்தில் விண்ணப்பித்துள்ளார். இந்த வழக்கு நேற்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, கங்கனா ரனாவத் ஒரு பிரபல நடிகையாக இருக்கலாம், அவருக்கு பல பணிகள் இருக்கலாம். ஆனால் நீதிமன்றத்தை பொறுத்தவரை அவர் ஒரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் என்பதை மறுக்க முடியாது என்று நீதிபதி கூறியுள்ளார்.
மேலும், குற்றம் சாட்டப்பட்டவருக்கு நிரந்தரமாக ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க உரிமை கோர முடியாது. இதுவரை, குற்றம் சாட்டப்பட்டவர் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்காக நீதிமன்றத்திற்கு ஒத்துழைத்து ஆஜராகவில்லை, குற்றம் சாட்டப்பட்டவர் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் பின்பற்ற வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தித் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் கங்கனா ரனாவத்தின் மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளதை பலரும் வரவேற்றுள்ளனர். அனைவருக்கும் நீதி ஒன்றுதான் என்பதை இந்த நீதிபதி நிரூபித்துள்ளதாகவும் பலர் நீதிபதியை பாராட்டி வருகின்றனர்.
நடிகை மீரா மிதுன் கைது.. பிடிவாரண்ட் உத்தரவை அடுத்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை