சிவக்குமார்
Born on 26 Apr 1939 (Age 84) coimbatore
சிவக்குமார் பயோடேட்டா
சிவகுமார் இந்திய திரைத்துறையில் புகழ் பெற்ற தமிழ் திரைப்பட நடிகர், சொற்பொழிவாளர், மேடை பேச்சாளர் ஆவார். இவர் 1965-மண் ஆண்டு காக்கும் கரங்கள் திரைப்படத்தில் நடித்து திரையுலகிற்குள் அறிமுகமாகியுள்ளார்.
இவர் தமிழகத்தில் கோவை மாவட்டத்தில் காசிகவுண்டன்புதூர் என்னும் ஊரில் பிறந்தார். சிறுவயதில் இருந்து ஓவியத்தில் ஈடுபாடு கொண்டவர். இவர் மேடை பேச்சாளர் ஆவார், இவர் கம்பராமாயணத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர், இவர் நடத்தும் கம்பராமாயணம் சொற்பொழிவு நிகழ்ச்சிகள் தமிழகத்தில் மிகவும் பிரபலமானவையாகும்.
சிவகுமார் கோவையில் கொங்கு வெள்ளாளர் கௌண்டர் சமயத்தினை சேர்ந்தவர் ஆவார், இவர் லக்ஷ்மி குமாரி என்பவரை திருமணம் புரிந்தார். இவர்களுக்கு சூர்யா, கார்த்தி என இரு புதல்வனும், பிருந்தா என்ற புதல்வியும் உள்ளனர்.
இவரின் குடும்பத்தார்களான சூர்யா, கார்த்தி மற்றும் சூர்யாவின் மனைவி ஜோதிகா ஆகியோரும் திரைத்துறையில் ஈடுபாடு கொண்ட முன்னணி நடிகர்கள் ஆவார்.
தொடர்பான செய்திகள்