Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
நானும் சினேகாவும்...' - ‘காதல்’ குறித்து பிரசன்னாவின் விளக்கம்!
ஒரேயொரு படத்தில்தான் இருவரும் நடித்தார்கள். அது அச்சமுண்டு அச்சமுண்டு. அதன் பிறகு இருவரும் அவரவர் வேலையைப் பார்க்க ஆரம்பித்துவிட்டாலும், இருவருக்கும் திருமணம் என்கிற ரேஞ்சுக்கு கிசுகிசுக்கள் றெக்கை கட்டிப் பறக்க, வருத்தத்தில் இருக்கிறார் பிரசன்னா.
இதுகுறித்து அவர் கூறுகையில், "எனக்கு காதல், திருமணம் என எது நடந்தாலும் நிச்சயம் அது ஒளிந்து கொண்டு செய்ய மாட்டேன். என்னையும், சினேகாவையும் இணைத்து சமீபகாலமாக கிசுகிசுக்கள் பரவுவது எனக்கு தெரியும். சினேகாவுக்கும் இது தெரியும்.
நானும் சினேகாவும் படம் பார்க்கப் போய் இருக்கிறோம். ஆனால் நாங்கள் இருவர் மட்டுமல்ல. மற்ற நண்பர்களும் எங்களுடன் வந்து இருக்கிறார்கள். இரண்டு பேருக்கும் பொதுவான நண்பர்கள் அவர்கள். இயக்குநர் வெங்கட்பிரபு, பிரேம்ஜி, ஜெய் இப்படி... இவர்களுடன்தான் நானும் சினேகாவும் கோவா படம் பார்த்தோம்.
நான் ஏற்கெனவே எனக்கும் சினாகாவுக்கும் இடையே நட்பைத் தவிர வேறு எதுவும் இல்லை என்று கூறிவிட்டேன். ஆனாலும் விடாமல் ஏதாவது எழுதுகிறார்கள்... என்னன்னு சொல்றது போங்க!" என்றார்.
-
Dhanush: ராஷ்மிகாவுடன் ரொமான்ஸ் செய்யும் தனுஷ்.. துவங்கியது குபேரா படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங்!
-
Sivakarthikeyan: நடிகர் சங்க கட்டட பணிகளுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.50 லட்சம் நிதியுதவி!
-
தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்தை எச்சரித்த பிரபல தயாரிப்பாளர்.. பலருடன் தொடர்பு என பகீர் பேச்சு!